• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

குறை பிரசவம் மற்றும் பிறந்த குழந்தைகளின் உடல் எடையை உடனடியாக அதிகரிக்க ....

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு தன் குட்டிகளை பேணி பாதுகாப்பதில் முதன்மையான விலங்காக கருதப்படுகிறது. கங்காரு தனது குட்டிகளை குறை பிரசவத்திலேயே ஈன்று கொள்ளும். எனவே குறைப்பிரசவத்தில் பிறந்த குட்டிகளுக்காக கங்காருவின் வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு பை போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பை போன்ற அமைப்பில்  கங்காரு குறை பிரசவத்தில் பிறந்த தனது குட்டிகளை வைத்துக் கொள்ளும். தாயின் உடல் அரவணைப்பில் குட்டிகளானது ஆரோக்கிய நிலையை அடையும்.   



அதுபோல எடை குறைந்த அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உடல் எடையை அதிகரிக்க மற்றும் குழந்தையின் உடல் வெப்பநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வர கங்காரு பராமரிப்பு மருத்துவர்களால் இளம் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.


37 அல்லது அதற்கும் குறைந்த வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள்  எடை குறைந்த குழந்தைகள் ஆகும். இந்த  குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க இன்குபேட்டர் போன்ற பராமரிப்பு முறையில் வைத்துப் பேணப்படுகிறது. ஓரளவிற்கு உடல் எடை அதிகரித்த பின் இந்த கங்காரு தாய் பராமரிப்பு முறை KMC முறை பரிந்துரைக்கப்படுகிறது.

போதிய உடல் சுத்தத்துடன் குழந்தையை தாய் தனது மார்பில் அரவணைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை எவ்வித ஆடையும் இல்லாமல் இருக்க வேண்டும். தாயின் உடல் வெப்பநிலை குழந்தைக்கு சீராக பரவும் பொழுது குழந்தை இதமான உணர்வை அடைகிறது. மேலும் தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும் பொழுது தாயின் கருவறைக்குள் இருக்கும் பாதுகாப்பான உணர்வை குழந்தை அடைகிறது. 

தாய்க்கும் குழந்தைக்கும்  இடையில் ஏற்படும் இந்த உணர்வு குழந்தை ஆரோக்கியமான நிலையை அடைய உதவுகிறது. முதல் மூன்று மாதங்களுக்கு இதை அதிகமாக செய்யும் பொழுது குழந்தையின் எடை ஆரோக்கியத்துடன் சீராக அதிகரிக்கிறது.
 
சராசரி கால இடைவெளிகளில் கொடுக்கப்படும் தாய்ப்பால் மற்றும் கங்காரு முறை பராமரிப்பு  தொடர்ந்து செய்யும் பொழுது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதோடு நல்ல ஆரோக்கிய நிலையை அடையும். அதனால் வேறு மருத்துவ முறைகள் கையாளுவதை விட இம்முறை சிறந்த தீர்வை தரும்.
Share:

NCC மாணவர்களுக்கு நீட் தேர்வில் தனி மதிப்பெண்கள் உள்ளதா...

நீட் தேர்வு பற்றி தெரியுமா ...? 

நீட் தேர்வு என்பது மருத்துவ இளநிலை படிப்புக்கான (MBBS and BDS) தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். National Eligibility cum Entrance Test என்பதே NEETன் விரிவாக்கம் ஆகும். அந்த வகையில் தற்போது  மருத்துவர் ஆவதற்கு தகுதி தேர்வான  நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களை  கட்டாய பாடங்களாகக் கொண்டு படித்திருத்தல் அவசியம். இவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். இந்தத் தேர்வு நடக்கும் சில மாதங்களுக்கு முன்பு தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கப்படும் அதை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளடக்கம்:

தேர்வு முறை

இட ஒதுக்கீடு

NCC தேசிய மாணவர் படை

ஏன் இட ஒதுக்கீடு இல்லை


தேர்வு முறை:

நீட் தேர்வு முழுவதுமாக ஆஃப்லைனில் மட்டுமே நடக்கும் ஆன்லைன் தேர்வு கிடையாது இந்தத் தேர்வு இயற்பியல் வேதியியல் தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 45 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 180 வினாக்கள் பல் குறி வினாக்களாக கேட்கப்படும். தேர்வின் மொத்த நேரம் மூன்று மணி நேரம். ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த சில நாட்களில் இந்த தேர்தல் நடத்தப்படும். தேர்வு முடிந்த பின்னர் தேர்வு மதிப்பெண்கள்  தேசிய  மருத்துவ மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேசிய தரவரிசைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தகுதிக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

இட ஒதுக்கீடு:

இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் பொதுவாக அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC),  எலும்பியல் மாற்றுத் திறனாளிகள் (ODA) மற்றும்  பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் அரசு பணியிலும் சரி கல்வியிலும் சரி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

NCC தேசிய மாணவர் படை:

தேசிய மாணவர் படை என்று அழைக்கப்படும் NCC பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் நாட்டுப்பற்றை உருவாக்கவும் இந்திய பாதுகாப்புத் துறைகளில்  சேருவதற்கான ஆர்வத்தை உருவாக்கவும்  மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 



NCC சான்றிதழ்கள் A, B, மற்றும் C எனும் மூன்று வகைப்படும். இதில் கல்லூரியின் இறுதியில் பெறப்படும் சான்றிதழ் C உயர்ந்த ஒன்று ஆகும். இதில் A சான்றிதழ் பள்ளிகளிலும் B  மற்றும் C சான்றிதழ் கல்லூரிகளிலும் தேர்வு வைத்து தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்லூரியின் இறுதி வருடத்தில் தேசிய மாணவர் படை மையத்தினால் நடத்தப்படும் இறுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு C சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் வேலை வாய்ப்பில் அதாவது அரசு வேலைவாய்ப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 இந்த சான்றிதழ் வைத்து இருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பிடங்களுடன் தனி இட ஒதுக்கீடும் பல துறைகளில் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சீருடை பணியாளர்கள் நடத்தும் அனைத்து எழுத்து தேர்விலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் 10 வரை அளிக்கப்படுகிறது. அது போல  கப்பற்படை விமானப்படை தரைப்படை என அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல Staff Selection Board நடத்தும் தேர்வில் எழுத்து தேர்வு அல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.


 இது  போல்  NCC சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அது போன்று அந்தந்த மாநிலங்களும் NCC சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, கூடுதல் மதிப்பெண்கள்  என அனைத்தும் அளித்து வருகின்றது. 


ஏன் இட ஒதுக்கீடு இல்லை...?

இவ்வளவு உயர்ந்த சான்றிதழான C  சர்டிபிகேட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில்  தனியாக இட ஒதுக்கீடு அல்லது கூடுதல் மதிப்பெண்கள் உள்ளதா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் மருத்துவ திறமையை சோதிக்கும் ஒரு தேர்வாக மட்டுமே உள்ளது. மற்றப்படி விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் பொழுது திறமையான மாணவர்கள் தவிர்க்கப்பட நேரிடலாம். எனவே நீட் தேர்வில் கொடுக்கப்படும் தரவரிசைப் படி மட்டுமே மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மருத்துவர் பதவி மற்ற பதவிகள் போல் அல்லாமல் மிகவும் நுண்ணறிவு உடைய உயிர் காக்கும் தொழில்... இந்த உயிர் காக்கும் தொழிலுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையிலான மருத்துவர் தேர்ந்தெடுப்பது சரியானது அல்ல. எனவே தான் எந்த ஒரு கூடுதல் மதிப்பெண்களோ அல்லது இட ஒதுக்கீடு பிற துறைகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. 

அந்த நீட் தேர்வில் வகுப்புவாரியாக SC, ST, OBC, EWS, and PwD போன்ற வகுப்புவாரியான  இட ஒதுக்கீடு  மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு, யோகா, NCC போன்ற துறைகளுக்கு  தனியாக இட ஒதுக்கீடு எதுவும் இல்லை.

இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

வீடு கட்டும் செலவை குறைக்க கொத்தனார் மற்றும் இன்ஜினியரை தேர்ந்தெடுப்பது எப்படி...?

வீடு கட்ட வேண்டும் என்பது அனைவருக்கும் மிகப்பெரிய கனவு. அவ்வாறு கட்டும் வீட்டை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் கட்ட வேண்டும் என்பது எல்லோருடைய நோக்கமாக இருக்கும். அவ்வாறு வீடு கட்ட வேண்டும் எனில் முதலில் அனைத்தையும் திட்டமிடுதல் முக்கியம். அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது நாம் தேர்ந்தெடுக்கும் கட்டிட வல்லுனர் மற்றும் கொத்தனார். 



இன்று பெரும்பான்மையோர் கொத்தனார் மூலமாக வீடு கட்டுவதை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் சதுர அடிக்கு 2000 ரூபாய்க்கு குறைந்த செலவிலேயே வீடு கட்டித் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சதுர அடிக்கு 2000  ரூபாய்க்கு குறைந்து வீடு கட்டிக் கொடுப்பது என்பது லாபமான ஒன்றுதான். கொத்தனாரை விட வல்லுனர்களுக்கு கொடுக்கப்படும் தொகையானது அதிகம் தான் என்றாலும் வல்லுனர்களை வைத்து கட்டும் பொழுது வீடு கட்டும் மொத்த செலவில் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.

 ஒரு நல்ல இன்ஜினியரை வைத்து கட்டும் பொழுது கட்டுமான பொருட்களின் மீது அதிக அளவு பணத்தை சேமிக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு கட்டுமான பொருட்களின் பயன்பாடு பற்றி அதிக அளவு தெரிந்திருக்க கூடும்... தேவையான தரமான கட்டுமான பொருட்கள் மற்றும் குறைந்த அளவில் உபயோகிக்கும் விதம் ஆகியவற்றை நன்கு அறிந்திருப்பார். 


நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலையானது அதிகரிக்க கூடும். நல்ல கட்டிடக்கலை வல்லுநர்கள் இதை முன்கூட்டியே  அறிந்து அதற்கேற்றார் போல் வேலைகளை தொடங்குவர். சில நேரம் காலதாமதம் கூட அதிகமான செலவை உண்டு பண்ண கூடும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிக்க சிறந்த திட்டமிடுதல் மிகவும் அவசியம்.


கட்டுமான பொருட்களின் செலவு, குறிப்பிட்ட நேரத்தில் கட்டிடம் முடித்தல், திறமையான வேலையாளர்கள், கட்டுமான பொருட்களின்  தரம், மனைகளை  மாதிரியின் படி வடிவமைத்தல் போன்ற காரணங்களை மனதில் கொண்டு வல்லுநரை தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்று திட்டமிடுதலில் கொத்தனாரை விட இன்ஜினியரை நியமிப்பது மேற்குறிப்பிட்ட செலவுகளில் இருந்து பெரும் கணிசமான தொகையை சேமிக்க முடியும். 

கொத்தனார்கள்  சதுரடிக்கு குறைந்த பணத்தை கூறினாலும் கட்டுமான பொருட்கள், காலக்கெடு, தொழிலாளர்களை நியமித்தல் போன்ற காரணங்களில் பெருந்தொகையை செலவழிக்கலாம்.

கட்டிட வரைபடத்தை  இன்ஜினியரிடமிருந்து பெற்று விட்டு கொத்தனார் மூலம் கட்டிடத்தை எழுப்ப நினைப்பவர்கள் அதிக தொகையை செலவழிக்க வாய்ப்புள்ளது. வரைபடம் உருவாக்கும் வல்லுநர்கள்  மூலமே கட்டிடம் எழுப்புவது  மிகவும் நல்லது. 

கட்டிடத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இன்ஜினியரை விலைக்கு வாங்கி 
 வீடு கட்டலாம்.


இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்டில் பதிவு செய்யவும்.

 இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும்...



Share:

எதுவுமே பண்ணாம முடி கொட்டாமல் வளர வேண்டுமா ......

தற்பொழுது பெருகிவரும் மாசுபாடு, மாறிவரும் தட்பவெப்ப நிலை, மன அழுத்தம் மற்றும் வேலைச் சார்ந்த பிரச்சனைகள் போன்ற காரணங்களால் நம் உடல் நலம் கெட்டுப் போகிறது. உடல் நலம் கெட்டுப் போவதால் நமது உடலில் பாதிக்கப்படும் பகுதிகளில்  தலைமுடியும் ஒன்று. தலைமுடி பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி அழகை தருவதோடு மட்டுமல்லாமல் உடல் வெப்பத்தையும் பேணி பாதுகாக்கிறது. அதனால் முடி கொட்டுவது உடல்நலம் மட்டுமல்ல மனவளத்தையும் பாதிக்கும். 


இப்பொழுதெல்லாம்  முடியை கொட்டாமல் பாதுகாத்துக் கொள்ள மருத்துவத்துறையில் பலவிதமான சிகிச்சைகள் வந்துள்ளன. 

 வீட்டிலேயே பாட்டி வைத்தியம், பழங்கால மூலிகைகள் உபயோகப்படுத்துவது,  வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது  இன்னும் பல முறைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதன் மூலம் தலைமுடியின் அவசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

 ஆனாலும் இந்த எவ்வித முறைகளையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்காதவர்கள்,  பயன்படுத்த முடியாதவர்களுக்கு என ஒரு முக்கியமான ஆனால் சாதாரணமான செலவில்லாத ஒரு குறிப்பை இங்கு பதிவிடுகிறோம் ..

 ஒவ்வொருவரின் தலைமுடிக்கும் என ஒரு இயல்பு உள்ளது அது அவர்களின் குடும்ப ஜீன்களை பொறுத்தது. ஆனால் அனைவரின் தலைமுடிக்கும் பொதுவான இயல்பு ஒன்று உள்ளது. அது அந்த தலைமுடியை மென்மையாகவும் சரியான முறையில் கவனிப்பதும் ஆகும்.

முதலில் தலைமுடிக்கு தினமும் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் அல்லது மாலையில் ஒருமுறையாவது தலை சீவி பின்னலிட வேண்டும். அந்தப் பின்னலை  இறுக்கிப் பின்ன வேண்டும். இவ்வாறு இறுக்கி பின்னப்படும் பொழுது முடி எளிதில் உடையாமல் வலிமையுடன் காணப்படும்.  மேலும் முடியை இறுக்கி பின்னப்படும் பொழுது  தலையில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின்னலை நுனிவரை பின்னி அதை நான்கு அல்லது ஐந்து மடிப்புகளாக தலைமுடியின் உயரத்திற்கு ஏற்றவாறு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ள வேண்டும். ரிப்பன் வைத்து கட்டுவது சிறந்தது.  ஆனால் தற்போது யாரும்  அதை விரும்பவில்லை. எனவே ரப்பர் பேண்ட் போட்டு மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் தலை சீவும் முறை உள்ளவர்கள் தினமும் காலையில் இதை செய்ய வேண்டும் அல்லது மாலை வேலையில் தலை சீவுவர்கள் தினமும் மாலையில் இதே மாதிரி செய்ய வேண்டும்.


 வாரத்தில் இரு முறை தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் .அவ்வாறு ஊற்றும் பொழுது தலை வறட்சியாக இருக்கக் கூடாது. எண்ணெய் பசையுடன் இருக்க வேண்டும். மேலும் ஷாம்பு மைல்டு ஷாம்புவாக இருக்க வேண்டும். ஷாம்புடன் தண்ணீரை கலந்து அதன் பின் தலையில் பயன்படுத்த வேண்டும். சீயக்காய் உபயோகிப்பது இன்னும் நலம்.  

 தலையை சீவும் பொழுது மென்மையான சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து தலையை சீவ கூடாது. சிக்கு அதிகமாய் இருப்பின் பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவது நலம். முடியை அது வளரும் வாகிலேயே சீவ வேண்டும். அதற்கு எதிரான வாகில் சீவக் கூடாது.

இதை மட்டும் குறைந்தது மூன்று மாதங்கள் செயல்படுத்தி பாருங்கள் உங்கள் தலைமுடி உறுதியாக கொட்டாமல் 100% வளர தொடங்கும்.


 பெரும்பாலும்  குழந்தையாய் இருக்கும்போது அதாவது பள்ளி முடியும் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இரண்டு பின்னல் போட்டு ரிப்பன் வைத்து கட்டிக் கொள்வோம். அதனால்தான் பள்ளிக்கல்வி முடியும் வரை நமது தலை முடி எந்த பிரச்சினையும் இல்லாமல் அழகாக இருக்கும்.

 ஏனெனில் தினமும் சுழற்சி முறையில் அதை செய்து கொண்டே இருக்கிறோம். என்று நம் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு வருகிறோமோ அன்றுதான் உங்கள் முடி கொட்ட தொடங்கும்.

மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும். இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பெற எங்கள் பக்கத்தை தொடரவும்.
Share:

ஏன் NCC யில் சேர வேண்டும்...? எழுத்து தேர்வு இல்லாமல் அரசு வேலையா.... ?

என்சிசி யில் சேர்வதால் என்ன நன்மைகள்...? ஏன் சேர வேண்டும் ...?

மத்திய மற்றும் மாநில அரசால் பள்ளி கல்லூரிகளில் ராணுவ பயிற்சியை எளிய முறையில் அளித்து  நாட்டுப்பற்றை மாணவர்களுக்கு இளம் வயதிலேயே உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரிவுதான் என்சிசி. என்சிசி என்பது தேசிய மாணவர் படை என்பதன் சுருக்கமே ஆகும். தேசிய அளவில் மாணவ மாணவியர்களை ஒன்றிணைத்து வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இதன் நோக்கமாகும். என்சிசி ஆனது இந்தியா முழுவதும் உள்ள தனியார்  மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது.
 இந்திய பாதுகாப்பு அமைச்சரவையில கீழ் செயல்படுத்தப்பட்டு இதன் தலைமையகம் நியூ டெல்லியில் அமைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஒழுக்கமும் பொறுப்பும் பெற்று தேசப்பற்று மிக்க ஒரு இந்திய குடிமகனாக உருவாகின்றனர். 


அதுமட்டுமின்றி என்சிசி யில் சேரும் மாணவர்களுக்கு பலவித பயன்கள் கிடைக்கின்றன.  முதலில் தனிப்பட்ட ஒழுக்கமும் சமுதாயத்தில் பற்றும் ஏற்படுகின்றன. நாட்டின் மீதும் நாட்டின் தலைவர்கள் மீதும் நம் நாட்டில்  வளங்கள் மீதும் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் இளைஞர்களுக்கு ஏற்படும். இளைஞர்களுக்கு நாட்டின் மீது பற்று ஏற்படும் பொழுது இந்தியா உலக அளவில் ஒரு எழுச்சி மிக்க நாடாக உருவாகும். ஏனென்றால் இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் தான் உள்ளது. எனவே அந்த இளைஞர்களை பட்டை தீட்டும் ஒரு திட்டமே தேசிய மாணவர் படை.

என்சிசி மாணவர்களுக்கு என்று நடத்தப்படும் வருடாந்திர முகாம்களில் பல வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது மாணவர்களின்  தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர்கள் வேலை வாய்ப்பு தகுதியை உயர்த்துவதற்கும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக முகாம்களில் துப்பாக்கி சூடுதல் பயிற்சி, வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி,மற்றும் சில கைத்தொழில் பயிற்சி என பலவகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் தேசிய மாணவர் படையால் நடத்தப்படும் முகாம்கள் பலவகையாக உள்ளன. அதில் ஆனுவல் ட்ரைனிங் கேம்ப், அட்வென்ச்சர் கேம்ப், ஆர்மி அட்டாச்மென்ட் கேம்ப் என பல வகையான முகாம்கள் மாணவர்களின் திறனை உயர்த்துவதற்கு வருடம் முழுவதும் இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆர்மி அட்டாச்மெண்ட் கேம்ப் கல்லூரி மாணவ மாணவியர்களை ராணுவ பயிற்சி நடைபெறும் இடத்தில் வரவழைத்து பத்து முதல் 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அவர்கள் ராணுவ பயிற்சிகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஒரு சில பயிற்சிகளை எடுத்துக் கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இது ராணுவத்தில் சேர்வதற்கான குறிக்கோளை உடைய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

தேசிய மாணவர் படை பள்ளிகளிலும் செயல்படுவதால் சிறுவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தி உரிய வழியில் அழைத்துச் செல்ல முடிகிறது. எனவே இவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும் பொழுது
சமுதாயத்தில்  மதிக்கக் கூடிய வகையில் தங்கள் இளமைப் பருவத்தை அடைகின்றனர். மேலும் அவர்களை சிறுவயதிலேயே ஒழுங்குபடுத்துவதால் நேர்வழியில் சென்று உயரிய கனவை எளிதில் நிறைவேற்ற முடியும்.


ஒழுக்கம் உள்ள மாணவர்கள் கல்வியிலும் பிற செயல்களிலும் குறிப்பிட்ட மதிப்பை அடைந்து வாழ்க்கையில் உயர்கின்றனர். அதாவது பள்ளியில் பெறும் என்சிசி சான்றிதழ் கல்லூரி செல்லும் பொழுது உதவுகிறது. கல்லூரியில் பெறப்படும் B மற்றும் C சான்றிதழ்கள் அரசு வேலை வாய்ப்புக்கும் தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கும் உதவுகின்றன. 


என்சிசி சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு படைகளான முப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 எவ்வகையான முன்னுரிமைகள் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

UPSC மற்றும் Staff Selection Commission ன் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு பங்கு பெறும் வாய்ப்பு உண்டு. அனைத்து இந்திய பல்கலை கழகங்களில்  பொறியியல்  மற்றும் உயர் கல்வி களில் தனி இட ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
கல்லூரியில் படிக்கும் பொழுதே என்சிசி யில் உள்ள மாணவர்களுக்கு டெல்லியில் ஜனவரி 26 இல் குடியரசு தினத்தன்று அணி வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப் படுகிறது.

தரைப்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் அனைத்து சீருடை பணியாளர் தேர்வாணையத்திலும் என்சிசி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி மதிப்பெண்கள் உண்டு.  

இந்திய ராணுவத்தில் Special Entry  மூலம் 55 பதவிகள் என்சிசி "சி" சான்றிதழ்கள் வைத்திருப்பவருக்கு என்று தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.

சகாரா இந்தியா,  ரிலையன்ஸ் குழுமம் போன்ற முதன்மை தனியார் நிறுவனங்களில் நிறைய பணிகளுக்கு என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

 எவ்வாறு விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளதோ அது போன்று என்சிசி  சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு முதன்மையான துறைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

பாரா ராணுவப் படை பிரிவிலும்  2 முதல் 15 மதிப்பெண்கள் வரை  என்சிசி C சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
 அதாவது BSF, CISF, CRPF, SSB etc என அனைத்து பிரிவிலும் இந்த மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது.

என்சிசி C சர்டிபிகேட் வைத்திருப்பவர்களுக்கு UPSC நடத்தும் CDS தேர்வில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்பை அடைகின்றனர்.

என்சிசி C சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு இந்திய கப்பற்படை பிரிவில் Sailor  பதவிக்கு 6 மதிப்பெண்களும்,  Sailor GD பதவிக்கு எழுத்து தேர்வும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி 9 காலி பணியிடங்கள் தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்திய விமானப்படை அளிக்கக்கூடிய அனைத்து பயிற்சிகளிலும் 10% என்சிசி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வகையான இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் என அனைத்து துறைகளிலும் என்சிசி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் என்சிசி மாணவர்களுக்கு மாநில பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது மேலும் என்சிசி யில் உள்ள பணிகளும் என்சிசி மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. Associate NCC Officer, GCI Girls Cadet Instructor, CGI Civilian Gliding Instructor போன்ற அதிகாரப் பணிகளுக்கு என்சிசி மாணவர்கள்  மட்டுமே பணியாற்ற வாய்ப்பு உள்ளது. 

 இதை தகுந்த முறையில் பயன்படுத்தி நாமும் உயர்ந்து நாட்டையும் உயர்த்துவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும் மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

பிரக்யானந்தா இந்தப் பள்ளி மாணவரா....?

சென்னையைச் சார்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா வயதில்  ஐந்தாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆவார்.

 இதுவரை பல உலகளாவிய போட்டிகளில் வெற்றி பெற்ற இவர் 2023ல் உலக கோப்பை செஸ் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் 18-ஆவது வயதில் சதுரங்க உலகக் கோப்பை இறுதிச் சுற்றை அடைந்த இந்தியாவின் மிக இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இறுதிச் சுற்றை அடைந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயின்றவர். வேலம்மாள் வித்யாலயா பள்ளி  பல சதுரங்க வீரர்களை உருவாக்குகிறது. இங்கு சதுரங்க போட்டிக்கு என்று தனி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது

இந்த இளம் வயதில் சாதனையை புரிந்த பிரக்யானந்தாவை இந்திய மக்கள் கொண்டாடி வரும் வேளையில் இதுபோன்ற சாதனையாளர்கள் தமிழர்கள் என்பதில் நாமும் பெருமிதம் கொள்வோம்.

இது போன்ற தகவல்களை அறிய எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களை கமெண்டில் பதிவு செய்யவும்

Share:

மாவு புளிக்கவில்லையா... உடனடியாக இதைச் செய்யுங்கள்....

மழைக்காலத்தில் இட்லி தோசைக்கு  அரைக்கப்படும் மாவானது சீக்கிரம் புளிக்காது. அதைப் புளிக்க வைத்து உபயோகப்படுத்துவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். சீக்கிரம் புளிக்காத மாவு இட்லி தோசைக்கு நன்றாக இருக்காது.

புளிக்காத மாவை உணவிற்கு உபயோகப்படுத்தும் பொழுது அது வயிற்று பிரச்சினைகளையும் உருவாக்கும். குறிப்பாக  இட்லி வராமல் துணியுடன் அதாவது பாத்திரத்துடன் ஒட்டிக் கொள்ளும். நல்ல சுவை வரவேண்டும் எனில் மாவானது அரைத்த நாலு முதல் ஆறு மணி நேரத்திற்குள் புளிக்க வேண்டும். 

ஆனால் மழைக்காலத்தில் மாவானது புளிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் மாவானது அதன் சுவையை இழந்துவிடும். இதற்கு அருமையான டிப்ஸ் ஒன்று உள்ளது அதனை இங்கு பதிவிடுகிறோம். 

ஒரு படி அரிசி போட்டு அரைக்கும் மாவிற்கு ஒரு இளநீரை வாங்கி அதில் உள்ள நீர் அனைத்தையும் மாவில் ஊற்றி வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். இளநீரில் உள்ள நொதிமங்கள் மாவை சீக்கிரம் நொதிக்க செய்கிறது. அந்த மாவு இட்லி தோசைக்கு கூடுதல் சுவை அளிப்பதுடன் நீண்ட நேரத்திற்கு சுவை குறையாமல் இருக்கும்.
அந்த மாவில் காம்புடன் கூடிய பச்சை மிளகாய் ஒன்று  போட்டு மூடி வைத்தால் அதன் பின்  அந்த மாவு புளிக்காது. தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்தலாம்.

இந்தப் பதிவில் வரும் சந்தேகங்களுக்கு   கீழே கமெண்டில் பதிவு செய்யவும். 

இது போன்ற குறிப்புகளை உடனடியாக அறிய எங்கள் பக்கத்தை தொடரவும்.
Share:

அரசுப்பள்ளிகளில் இவ்வளவு நன்மைகளா... !

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு

இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு ஒரு முக்கியமானதாகும் ஏனென்றால் நமது தமிழக அரசு கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழ்நாட்டில் கல்வியானது ஐந்து ஆண்டுகள் தொடக்கக் கல்வியையும் மூன்று ஆண்டுகள் நடுநிலைக் கல்வியையும் இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக் கல்வியும் மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வியையும் ஆக மொத்தம் 12 ஆண்டுகள் கொண்டது அதாவது கல்வித் திட்டமானது 10+2 என்ற பள்ளி படிப்பை கொண்டது. தனியார் பள்ளிகளில் 3 1/2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க ப்படுகிறது ஆனால் தமிழக கல்வித்துறையில் ஐந்து வயதிற்கு மேற்பட்டு குழந்தைகளுக்கு முதலாம் ஆண்டு பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதில் பத்தாவது 11 வது பன்னிரண்டாவது மாநில அளவில் தேர்வானது நடத்தப்படுகிறது இதில் பன்னிரெண்டாவது மதிப்பெண்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்வாக பார்க்கப்படுகிறது எனவே பள்ளி கல்லூரி பள்ளி கல்வியை பொறுத்தவரையில் 12 ஆம் வகுப்பு மாதிரி பெண்கள் தங்களின் துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்வாக கொள்ளப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தமிழை முதன்மையாகக் கொண்டு பாடங்கள் பயிற்று வைக்கப்படுகின்றன தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வி தொடர்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் வழிக் கல்வியை அரசு அதிக அளவில் ஆதரிக்கிறது தமிழில் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழியில் படித்து தேர்ச்சி அடைபவர்களுக்கு தனி இடவித்திக்கீடு அளிக்கப்பட்டுள்ளது
கல்வித்துறை அமைச்சகமே தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தலைமையாக பார்க்கப்படுகிறது கல்வித் துறை அமைச்சரே இதன் தலைமை பொறுப்பாளர். கல்வித்துறையின் கீழ் பல்வேறு வகையான இயக்கங்கள் உள்ளன.  இவ்வகை இயக்கங்கள்  கல்வித்துறையின் கல்வி மற்றும் தேர்வு பணிகள் வேலைவாய்ப்பு பாடநூல் மற்றும் பாடங்கள் வடிவமைப்புத்தல் இன்னும் பல அமைப்புகளுக்கு பொறுப்பாகின்றன அதன் இயக்கங்கள் பின்வருமாறு

அரசு தேர்வு இயக்ககம் பள்ளி கல்வி இயக்ககம்
தொடக்கக்கல்வி இயக்ககம் இடைநிலை கல்வி வாரியம்
அரசு தேர்வு வாரியம்
தமிழ்நாட்டு பாடநூல் கழகம்

தமிழ்நாட்டில் மொத்தம் 200500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு வகையான
அரசுப்பள்ளிகளில்
இவ்வளவு நன்மைகளா... !

தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் வழங்கும் நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

1ஆம் வகுப்பு முதல்  12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இலவச கல்வி.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் முன்னுரிமை  வழங்கப்படுகிறது.

இதில் மிக முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஓமியோபதி மருத்துவம், சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 
7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள திறமையான மாணவர்களும் மேற்படிப்பு படிக்க எளிதாகிறது. 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

பெண் கல்வி இடைநிற்றலை தவிர்த்து பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
அதாவது நமது கல்வித்துறை பெண் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இது மட்டும் இன்றி பல வகையான இலவச பொருட்கள் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அவை பின் வருமாறு:

பன்னிரண்டாம் வகுப்பு வரை விலையில்லா புத்தகங்கள் மற்றும் விலையில்லா  குறிப்பேடுகள்.

 பாட நூல்களுக்காக எந்தவித பணமும் செலவழிக்க தேவை இல்லாததால் அனைத்து தரப்பு மாணவர்களும் குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களும் கல்வி கற்பது மிகவும் எளிதாகிறது.

விலையில்லா சீருடைகள்.

விலையில்லா புத்தகப்பை.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ மாணவியர்களுக்கு இலவச காலுறையுடன் கூடிய  காலணிகள். மலையோரம்  உள்ள அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச காலுறையுடன் கூடிய  காலணிகள்.

ஆரம்ப பள்ளிக்கு படிக்கும் குழந்தைகளுக்கு இலவச வண்ண பென்சில்கள்.

கணித உபகரணப் பெட்டி.

புவியியல்  வரைபட நூல்.

தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.

விலையில்லா மிதிவண்டி...

விலையில்லா மடிக்கணினி... 

மலையோரத்தில் மற்றும் குளிர் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்வெட்டர்.

மலையோரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ரெயின்கோட். 

தற்பொழுது தமிழக அரசினால் காலை சத்துணவு திட்டமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி திட்டம் எனப்படும் ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி திட்டம் படிப்பு மட்டுமல்லாமல் பிற சமூகம் சார்ந்த நலன்களிலும் அக்கறை கொள்கிறது. இது பால்வாடி என நம்மிடையே அறியப்படுகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் தமிழக முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது. இது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பக் கல்விக்கான தேடலை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பசியையும் நிவர்த்தி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவு கவனம் கொடுக்கப்படுகிறது.

இலவச பேருந்து பயண அட்டை...

அது மட்டும் இல்லாமல் இலவச பேருந்து பயண அட்டை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் தூரத்தில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பது ஊக்குவிக்கப்படுகிறது.


 போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு உதவி செய்யப்படுகிறது.

 அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு தேன்சிட்டு மாத இதழ் வழங்கப்படுகிறது...

இது போன்ற அரசு பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் நம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவோம். கல்வி வளமிக்க வளமான நாட்டை உருவாக்குவோம்.

 இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.

Share:

தங்க கொலுசு காலில் ஏன் அணிய கூடாது...

நாம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சில விஷயங்கள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துக்களை கொண்டவை. அந்த வகையில் எவ்வளவு பெருமதியான பொருட்கள் இருந்தாலும் நம் நாடுகளில் ஆபரணங்களை தங்கத்தில் அணிவதிலேயே விருப்பம் கொள்கிறோம்.

 அதுவும் தங்கத்தை அணியும் இடங்களான காது, மூக்கு மற்றும் கழுத்து  போன்ற இடங்கள் வர்ம புள்ளிகளை தூண்டி உடல் உறுப்புகளை வலிமையாக வைப்பதுடன் உடல் அழகையும் பேணி பாதுகாக்கிறது. பழங்காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தின் காரணமாக அணிகலன்கள் அணிவது கட்டாயமாக இருந்தது.
இவ்வாறு அணியப்படும் தங்கம் இடுப்புக்கு கீழே அதாவது காலில் அணிந்து கொள்வதில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. 

ஏன் தங்கம் காலில் அணிய கூடாது...?

தங்கத்தை அள்ளித் தருபவள் மகாலட்சுமி. தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. 

செல்வ வளம் நிரம்பிய மகாலட்சுமியின் வடிவமான தங்கம் காலில் அணியும் பொழுது மகாலட்சுமியை அவமதிப்பதாகும். அவ்வாறு அணியும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம்  செய்ய மாட்டாள்.

 மேலும் தங்கமானது குருவுடன் தொடர்புடைய உலோகம். 
மஞ்சள் நிற அதிபதியான குரு பகவான் வலுத்திருக்கும் பொழுது அவர்கள் பெரும் செல்வத்தை உடையவராகவும் தங்கத்தை உடையவராகவும் இருக்கிறார்கள்.
 அதனால்  குரு பகவானுக்கு உகந்த தங்கத்தை காலில் அணியும் பொழுது குருவை அவமதிப்பதாகும். செல்வமானது தங்காது நம்மை விட்டு சென்று விடும்.

எனவே இடுப்புக்கு கீழே காலிலோ அல்லது கால் விரலிலோ தங்கத்தை அணிவது நல்லதல்ல. 

 இது போன்ற பயனுள்ள செய்திகளை அறிய எங்கள் பக்கத்தை தொடரவும்




Share:

வீடு கட்ட இனி செங்கல் தேவையில்லையா...?

உங்கள் கனவு இல்லத்தை கட்டும் முன்பு இந்த செய்தியை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நம் வீடு கட்டும் பொழுது செங்கற்களை பயன்படுத்துகிறோம். நல்ல செங்கற்கள் கட்டிடத்தை நீண்ட நாளைக்கு  வலிமையுடன் பாதிப்பின்றி வைத்திருக்கின்றன. தற்போது உள்ள காலங்களில் ஏஏசி ப்ளாக் செங்கற்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. 

இதை பயன்படுத்துவதால் அதிகளவு நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்கின்றன. 

நன்மைகள்:

முதலில் விலையானது செங்கற்களை விட குறைவு. அதாவது  இந்தியாவில் ஒரு கண மீட்டருக்கு குறைந்தபட்சமாக 2000 ரூபாய் முதல்  கிடைக்கிறது.

இந்தக் கற்களை செங்கற்கள் மாதிரி  உபயோகப்படுத்த முடியாது. இந்த கற்களை ஒட்டுவதற்கு என்று தனிப்பட்ட பசை  உள்ளது.  

செங்கற்களை ஒப்பிடும்போது  குறைந்த நாட்களில் குறைந்த தொழிலாளர்களை வைத்து எளிதில் முடிக்க முடியும்.

 இது கோடை காலம் குளிர்காலம் இரண்டிலும் வீட்டு சுவர்களை குளுமையாக வைத்துக் கொள்ளும்.

தீமைகள்:

ஏஏசி ப்ளாக் எல்லோராலும் எளிதாக கட்டி விட இயலாது. தகுதி வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே கட்டிட இயலும். 

ஏஏசி ப்ளாக் வைத்து கட்டும் பொழுது சிறிய தவறு ஏற்பட்டால் கூட அது கட்டிடத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். 

மேலும் இந்த வகை கட்டிடங்கள் தட்பவெப்ப நிலை மழை நீர் மற்றும் சில நுண்ணுயிர்களால் எளிதில் பாதிக்கப்படும். எனவே வீடு கட்டும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்பு உங்கள் இல்லத்தை கட்டத் தொடங்குங்கள்.

 இது போன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எங்கள் பக்கத்தை தொடரவும்
Share:

வீடு கட்டுவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ...

நம் அனைவருக்கும் வாழ்நாளில் சொந்த இல்லத்தில் அமர வேண்டும் என்பது கனவாக இருக்கும். அவ்வாறு கட்டும் நம் கனவு இல்லத்தை எல்லா வசதிகளுடனும் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைய விரும்புவது இயல்பு. தொடக்கத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல தரமானதாக அமையுமாறு வீடு கட்டும் பொழுது அது எதிர்காலத்தில் எந்தவித பிரச்சினைகளையும் இல்லாமல் செலவுகள் ஏற்படாமல் தடுத்து மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே வீடு கட்டுவது என்பது ஒரு கலை போன்றது. அதில் அடிப்படை புரிதல் கண்டிப்பாக தேவை. எனவே வீடு கட்டும் முன்பு சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டு தொடங்குவது சிறந்தது.

நீங்கள் கட்டும் வீடு சிறப்பானதாக அமைவதற்கு தேவையான  விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொதுவாகவே வீடு கட்டும் அனைவருக்கும் எந்த வகையில் செலவை குறைப்பது கம்மியான பட்ஜெட்டில் எவ்வாறு கட்டுவது என்பது மட்டுமே முதன்மையான விஷயமாக இருக்கும். ஆனால் தண்ணீர், மின்சாரம், மணல், மண், பெயிண்ட், சிமெண்ட், செங்கல் மற்றும் பிற முக்கியமான கட்டுமான பொருட்கள், மின்சார பொருட்கள் என அனைத்திலும் அதன் தரத்தினை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

மின்சாரம் மற்றும் தண்ணீர்


அடிப்படை வசதிகளான காற்றோட்டம், சுத்தமான தண்ணீர், போக்குவரத்து இவைகள் எல்லாம் நம் கட்டப் போகும் வீட்டில் இருக்கிறதா தெரிந்து கொண்டு வீடு மற்றும் மனை வாங்குவது சிறந்தது. அந்த வகையில் மிக முக்கியமாக மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு  இருக்கிறதா என்பதை கட்டாயம் தெரிந்து கொண்டுதான் வாங்க வேண்டும்.



மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு  ஆகிய வசதிகள் இல்லாத இடத்தில் அந்த வசதிகளை பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அது மட்டும் இல்லாமல் ஒரு பெரும் தொகையையும் செலவிட நேரிடும். இது பெரும் வேலையை உருவாக்குவதோடு மன உளைச்சலையும் உருவாக்கும். 



ஆசை நிறைந்த கனவுகளோடு கட்டும் வீடானது அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டுவது எல்லோருக்கும் அதிருப்தியை உண்டு பண்ணும். எனவே மனை மற்றும் வீடு வாங்கும் போது இந்த வசதிகள் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு அதிலும் தண்ணி குடிப்பதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு உகந்த நீரா என்று சோதனையின் அடிப்படையில் தெரிந்து கொண்ட பின்னரே அந்த மனைகளை வாங்குவது சிறந்தது. மேலும் நீர் மாசுபாட்டின் காரணமாக நமக்கு கிடைக்கும் நீரானது அதிக வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. அதிக உப்பு நிறைந்த நீரில்  வீடு கட்டும் பொழுது வீடு சீக்கிரத்தில் அரிப்புக்கு உள்ளாகலாம். இதனால் நீண்ட நாளைக்கு வீட்டின் தரம் வராமல் பாதிக்கப்படும். எனவே தண்ணீர் உப்பு இல்லாத வேதிப்பொருட்கள் கலக்காத நீர் என்பதை பரிசோதித்த பின்னரே அந்த இடத்தில் மனை கட்டுவது சிறந்தது.

 தண்ணீருக்காக பொருத்தப்படும் மோட்டார் நவீன ரக ஆட்டோமேட்டிக் மோட்டார் பொருத்துவது நல்லது. ஏனெனில் இதனால் மோட்டாரின் வெப்பம் அதிகமாவது தடுக்கப்படும். அவ்வாறு ஒரு அளவிற்கு மேல் வெப்பம் அதிகரிக்கப்படும் பொழுது மோட்டார் தானாகவே நின்றுவிடும். இதனால் சீக்கிரம் மோட்டார் பழுதடையாமல் பாதுகாக்கப்படும். நவீன ரக மோட்டார்கள் மின் கசிவு ஏற்படாதவாறு தண்ணீர் உள்ளே போகாமல்
அமைக்கப்பட்டிருக்கும். எனவே மோட்டார் வாங்கும் பொழுது இதனை சரிபார்த்து கவனமுடன் வாங்க வேண்டும். முடிந்தவரை தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத இடத்தில் மனைகள் வாங்காமல் இருப்பது  நலம்.

சிமெண்ட்

கட்டிடம் வலுவானதாக அமைவதற்கு மற்றொரு முக்கியமான பொருள் சிமெண்ட். இந்த சிமென்ட் தேர்ந்தெடுக்கும் முன்பு நல்ல தரம், விலை மற்றும்  பிராண்ட் அனைத்தையும் சரிபார்த்து வாங்க வேண்டும். சிமெண்டின் தரத்தைப் பொறுத்து தான் கட்டிடம் ஆனது வலுவானதாகவும் நீண்ட நாளைக்கு பிரச்சினை இல்லாமலும் இருக்கும்.

மணல்

சிமெண்டில் எந்த அளவு கவனம் கொள்கிறோமோ அதே அளவிற்கு மணலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது மணலில் அதிக  கலப்படம் செய்து ஏமாற்று வேலை நடக்கிறது. பெரும்பாலும் வண்டல் மண் கலப்படமும் அல்லது கடல் மண் கலப்படமும் அதிக அளவில் உள்ளது. வண்டல் மண் கலந்து  கட்டப்படும் வீடுகள் உறுதியானதாக இருக்காது. அது மழையினால் சேதாரம் அடையக் கூடும். அதேபோன்று கடல் மணலால்  கட்டப்படும் வீடுகள் சீக்கிரத்தில் அரிப்புக்கு உள்ளாகலாம். தூசு, குப்பைக் கழிவுகள், சிலிக்கா போன்ற வேதிப்பொருட்கள் உள்ள மணல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்படம் இல்லாத தரமான மணலா என சோதித்து வாங்க வேண்டும்.  உங்கள் வீட்டை கட்டும் கட்டிட வல்லுநர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்கிறாரா.. என்பதை அவரிடமும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

செங்கல்

நல்ல தரமான செங்கலை உபயோகப்படுத்துவது இன்னும் கட்டிடத்திற்கு உறுதியை அளிக்கும். உங்கள் மனை உள்ள இடத்தில் இருக்கும் மண்ணைப் பொறுத்து செங்கற்களை தேர்வு செய்வது சிறந்தது. இப்பொழுது செங்கலுக்கு மாற்றாக பல வகையான கட்டுமான பொருட்கள் உள்ளன. இன்டர் லாக் போன்ற வகை கற்களை  உபயோகப்படுத்தும் பொழுது கட்டிடத்தில் மொத்தத் தொகையில் கணிசமான தொகையை சேமிக்கலாம். எனவே நீங்கள் கட்டும் வீட்டிற்கு ஏற்றவாறு உள்ள செங்கலை தேர்வு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

இரும்பு பொருள்கள் 

வீடு கட்டுவதற்கு பல்வேறு நிலைகளில் பயன்படும் கட்டுமான பொருட்களில் இரும்பு கம்பிகளின் பங்கு அவசியமானது. எனவே இரும்பிலான பொருட்களை வாங்கும் முன் துருப் பிடிக்காத நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது எதிர்காலத்தில் வரும் அநாவசிய செலவை தவிர்க்கலாம்.

கட்டுமான பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி வைக்கும் பொழுது அதை உபயோகப்படுத்தாமல் போக அதிக அளவில் வாய்ப்புள்ளது. அது போல உபயோகப்படுத்தாமல் வீணாக்க நேரிடலாம். முடிந்தவரை நமது கண்காணிப்பு அதிகமாக இருக்கும் பொழுது கட்டுமான பொருட்களின் சேதாரத்தை வெகுவாக குறைக்க முடியும்.

பொதுவாகவே வீடு கட்டும் பொழுது அழகுக்கு முக்கியத்துவம் தருவதை விட தரத்துக்கும் உறுதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அந்த வகையில் பொருட்களை உபயோகப்படுத்தும் போது வீண் செலவை  குறைக்கலாம்.

நவீன கட்டுமான பொருட்களை பயன்படுத்தும் பொழுது வேலையின் அளவை கணிசமாக குறைக்கலாம். வேலையின் அளவு குறைக்கப்படும் பொழுது தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கலாம். இதனால் தொழிலாளர்களுக்கு செலவழிக்கப்படும் தொகையில் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலக்கெடுவில் வீட்டை கட்டி முடிக்கலாம். 

நிறைய பேர் மிக அழகாகவும் தரமானதாகவும் வீட்டு கட்டி முடித்த பின்பு அதன் பின் உபயோகப்படுத்தும் பெயிண்டுகளை சரியாக தேர்வு செய்யாமல் விடுவதால் வீட்டின் வெளிப்புறம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் வீட்டின் அழகினையும் கெடுத்து விடும். எனவே முடிந்தவரை பிராண்டட் பெயிண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் உட்புறமும் நல்ல நிறங்களை தேர்வு செய்வதால் மன நிம்மதியை ஏற்படுத்தி சுமூகமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வீட்டை நல்ல வெளிச்சத்துடன் காட்டும் வெளிர் நிற நிறங்களை தேர்வு செய்வது நல்லது. அடர்ந்த நிறங்கள் சோம்பலையும் வீட்டை இருட்டாகவும் காட்டும். பொருத்தமான நிறங்களை தேர்வு செய்வதும் நல்ல ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

இது போன்ற பயனுள்ள செய்திகளை பெறுவதற்கு எங்கள் பக்கத்தை தொடரவும்.  சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.


Share:

NCC Officerன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பகுதி நேர அலுவலராக  பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் Associate NCC Officer (என்சிசி அலுவலர்) ஒரு  நேரடியான அலுவலர் பதவி அல்ல.

 பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் பகுதிநேர என்சிசி அதிகாரியாக நேர்முகத் தேர்வு மற்றும்  NCC பயிற்சி அளிக்கப்பட்டு பகுதிநேர அலுவலராக நியமிக்கப்படுவர்.

அரசு இப்பதவிக்கான சம்பளம் எதையும் நிர்ணயிக்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் ஆசிரியர்களாக இருந்து பகுதி நேர அலுவலராக நியமிக்கப்படுவதால்  ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் தங்கள் ஆசிரியர் பணிக்கான சம்பளம் வாங்குகின்றனர்.  

மாறாக இவர்களுக்கு தரவரிசை ஊதியம் மற்றும் monthly allowance கொடுக்கப்படும். அது அவர்களின் கிரேடை பொறுத்து மாறுபடும்.

அதிலும் தரவரிசை ஊதியம் அவர்கள் என்சிசி பணி நிமித்தமாக அதாவது கேம்புக்கு செல்லும்போது மட்டுமே நாட்களை பொறுத்து வழங்கப்படும்.
Share:

பாகற்காயின் கசப்பு அதிகம் தெரிகிறதா ...இதோ உங்களுக்கான டிப்ஸ்

பாகற்காயை கசப்புத் தன்மை  இல்லாமல் எவ்வாறு பயன்படுத்தலாம் ...?

ஆங்கிலத்தில் Bitter Guard  என்று அழைக்கப்படும் பாகற்காய் நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய். சுவைகள் ஆறு அந்த அறுசுவையில் மிக முக்கியமான நன்மை அளிக்கும் சுவை கசப்பு. இது அனைவராலும் விரும்பத்தகாத வகையில் இருந்தாலும் உயரிய நன்மைகளைக் கொண்டது. அந்த கசப்பு சுவைக்கு பெயர் பெற்ற காய் பாகற்காய். கசப்பு சுவையானதாக இருந்தாலும் அதில் உள்ள நன்மைகள் உடலுக்கு இனிப்பான நன்மை அளிக்கக் கூடியவை. பாகற்காய் கொடி வகையை சார்ந்தது. பாகற்காய் நிறம் வடிவம் அளவு அவைகளுக்கு ஏற்ப பெயர்கள் உண்டு. இந்தியாவில் மிதிப்பாவை மற்றும் கொம்பு பாவை பரவலாக அறியப்படும்  வகைகள் ஆகும்.

பாகற்காயின் வகைகள் உண்டா...?

 மிதிப்பாவை அளவில் மிகவும் சிறியது. ஆனால் மிகுந்த ருசியை உடையது. கொம்பு பாவை சற்று நீண்டதாக இருக்கும். மேலும் இதன் விதைகள் சற்று பெரிய அளவில் இருக்கும். சில கொம்பு பாவைகள் இன் முனைகள் மழுங்கியதாகவும் காணப்படும். இது பச்சை, அடர் பச்சை மற்றும் வெளிர் நிறத்திலும் காணப்படும். பழுத்தப் பாகற்காய் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பழுத்தப் பாகற்காயின் உள்ளே நல்ல சிவப்பு நிறமாக காணப்படும்.

பிள்ளை பெற்ற இளம் தாய்மார்களுக்கு பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவர்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.  பாகற்காய் நன்மைகள் மற்றும் அது எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.





நன்மைகள்:

சர்க்கரை உள்ளவர்களுக்கு பாகற்காய் இயற்கை அழித்த கொடை . வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வு. வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தம் செய்வதில் பாகற்காய்களுக்கு தான் முதலிடம். பாகற்காயில் உள்ள கசப்பு நுண்ணுயிர் மற்றும் பூச்சிகளுக்கு எதிரியாக கருதப்படுகிறது. இது உடலை திடகாத்திரமாக வைக்க உதவும். பாகற்காய் விதைகளிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது. பாகற்காயின் விதைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பாகற்காயின் நிலைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும்  பாகற்காயின் விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகின்றன. பாகற்காய் விதைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்குகிறது.


பாகற்காயில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. எனவே பாகற்காய் ஜூஸ் தினம் குடிப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது.

 நற்பயன் அடங்கிய பாகற்காய் எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் எளிமையான விலையில் கிடைக்கக்கூடிய காய் என்பதால் அனைவரும் இதை பயன்படுத்தலாம்.  பாகற்காயில் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சூப் வைத்தும் குடிக்கலாம். அல்லது பாகற்காயை குழம்பு பொரியல், வறுவல், கூட்டு, குழம்பு, மசியல் என அனைத்து வகைகளிலும் தயாரிக்கலாம். ஆனால் இதில் உள்ள கசப்பு தன்மையின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இதை விரும்பி உண்ணுவதில்லை.

அனைவரும் பாகற்காய் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு அதன் கசப்பு தன்மையை குறைத்து அதன் சுவையை அனுபவிக்க ஒரு அருமையான டிப்ஸ் இங்கு பதிவிட்டுள்ளோம். 


பாகற்காயின் கசப்புத் தன்மையை குறைப்பது எப்படி...?

 பாகற்காயை சமைக்கும் பொழுது அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்க்கும் பொழுது பாகற்காயின் கசப்பு சுவை குறைக்கப்படுகிறது. உதாரணமாக பாகற்காயை வறுவல் செய்யும்பொழுது பாகற்காய் சேர்த்த பின்பு அதனுடன் சில எலுமிச்சை துளிகளை சேர்க்க வேண்டும். பாகற்காய் வறுவல் கசப்பு இன்றி மிகுந்த சுவையுடன் இருக்கும். இவ்வாறு பாகற்காயை எவ்விதமாக சமைத்தாலும் அதில் சில எலுமிச்சை துளிகளை சேர்க்கும் பொழுது பாகற்காயின் கசப்பு முழுவதும் எலுமிச்சையினால் எடுக்கப்பட்டு கூடுதல் சுவை அளிக்கிறது . பாகற்காயில் வறுவல் பொரியல் பாகற்காய் மசாலா பாகற்காய் கூட்டு மற்றும் பாகற்காய் குழம்பு என அனைத்து வகைகளிலும் பாகற்காய் உணவில் சேர்க்கப்படுகிறது

பாகற்காயில் குழம்பு, பொரியல்,  மசாலா மற்றும் பாகற்காய் வறுவல் என பலவிதமான ரெசிபிகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் கசப்பு தன்மையை குறைக்க மற்றொரு வழி ஒன்று உள்ளது. பாகற்காயை சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவி விட்டு துண்டுகளாக  நறுக்கி அதனை புளித்த மோரில்  சில நிமிடங்கள்  ஊற வைக்க வேண்டும். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை அதை மூடி ஊறவைத்து பின்பு  சமையலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை குறைந்து உணவின் ருசியை அதிகரிக்கிறது.


பக்க விளைவுகள்:

என்னதான் காய்கறிகளும் பழங்களும் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டாலும் ஒரு அளவிற்கு மேல் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது உடலுக்கு ஆரோக்கியக் சீர் கேடை உருவாக்குகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதுபோல எவ்வகையான சத்துக்களாக இருந்தாலும் அதை அளவுக்கு மீறி சேர்க்கும் பொழுது நமது உடலில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையை உருவாக்கலாம். எனவே உடலுக்கு ஏற்றவாறு அதனை சேர்த்துக் கொள்ளுதலே சிறந்தது. அந்த வகையில் பாகற்காயையும் அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுவும் இது கசப்பு சுவை பொருந்திய காய்கறி என்பதால் மிக குறைந்த அளவில் அதேசமயம் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிலருக்கு இன்னும் நன்மை அளிக்கும். பாகற்காயை அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது குடலில் உள்ள குடல்  உறிஞ்சிகள் அதன் சத்துக்களை  உட்கிரகிக்காமல் செரிமான குறைபாட்டை உண்டு பண்ணலாம். இதனால் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு உருவாக காரணமாகலாம். ஏனெனில் சிலரின் உடலுக்கு கசப்பு சுவை ஒத்துக் கொள்ளாது. இந்த கசப்பு சுவை ஒத்துக் கொள்ளாதவர்கள் பாகற்காயை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம் என்பது பொதுவான கருத்து என்றாலும் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் சிறந்த மாறுபாட்டை உருவாக்குவதால் அதனை கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். எனவே ரத்த சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது பாகற்காயை எடுத்துக் கொள்ளலாமா என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பாகற்காய் கரு சிதைவுக்கு காரணமாகலாம் என்ற ஒரு பொதுவான கருத்து நம்மிடையே உண்டு. எனவே கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை அதிகளவு உணவில் சேர்க்கக்கூடாது. மேலும் மாதவிடாயின் போது பாகற்காய் சாப்பிடும் பொழுது அது ரத்தப்போக்கை அதிகரித்து உடலை பலவீனமடைய செய்யலாம். எனவே பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அளவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இது சிறந்தது என்றாலும் கசப்பு சுவை பொருந்தியதால் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்  கொள்பவர்களுக்கு சில வரையறைகள் உண்டு. அந்த வகையில் அவர்கள் கோழிக்கறி, அகத்திக்கீரை மற்றும் பாகற்காய் போன்ற பொருட்களை உணவில் சேர்க்கக்கூடாது. பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சித்தா மருந்துகள் பலனளிக்காமல் செய்துவிடும். எனவே நீண்ட நாள் வைத்தியம் செய்பவர்கள் மற்றும் சித்தா மருந்துகளை உட்கொள்பவர்கள் பாகற்காயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

உடலில் அலர்ஜி, ஒவ்வாமை, சொரி மற்றும் சிரங்கு பிரச்சனை உள்ளவர்கள் பாகற்காயை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்பு ஒருவித நச்சு தன்மையை ஏற்படுத்தக் கூடும். இந்த நச்சுத்தன்மையால் மேற்குறிப்பேற்ற பிரச்சினைகள் இன்னும் அதிக அளவில் பெரிதாகலாம்.

இது போன்ற சமையல் குறிப்புகளை  காண நமது பக்கத்தை பார்வையிடுங்கள். உங்கள் விமர்சனங்களை இங்கு கீழே கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

குழந்தையின் தோல் வறட்சியாக உள்ளதா ...? கலராக வேண்டுமா...? குளியல் பொடி இதோ......

குழந்தைகளின்  நலங்கு மாவு:

 எத்தனை வகை இரசாயனம் கலந்த குளியல் சோப்புகள் வந்தாலும் வீட்டில் தயார் செய்யும் குளியல் பொடி அதாவது நலங்கு மாவின் பலன் எந்த சோப்பும் தராது. இரசாயன சோப்பு பயன்படுத்தும் பொழுது மென்மையான குழந்தைகளின் தோல் அதிக அளவில் பாதிக்கப்படும். தற்காலத்தில் நிறைய சோப்புகள் வந்தாலும் அது நிறைய பக்க விளைவை உருவாக்கும். ஆனால் நம் வீட்டில் தயார் செய்யும் குளியல் பொடியானது குழந்தைகளின் தோலுக்கு நல்ல ஊட்டச்சத்துக் கொடுத்து தோலினை மென்மையாக்குகிறது. இது எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

 பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுதே இதை உபயோகப்படுத்தி வரும் பொழுது அவர்களின் தோல் இரசாயனத்திற்கு உட்படாமல் இருப்பதால் எந்தவித தோல் பிரச்சனையும் இல்லாமல் அழகான பளபளப்பான சருமத்தை பெறுகின்றனர். 

அதிகரித்து வரும் மாசு மற்றும்  புகை தற்போது காணப்படும் மாறுபட்ட தட்பவெப்ப நிலை சூழல் மற்றும் அதிகமான வெப்பம்  போன்ற காரணங்களால் தோலானது மிகவும் பாதிக்கப்படுகிறது. குளியல் பொடியை மட்டும் நாம் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருவதால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

 ஆண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் அரைத்து குளிக்கும் பொழுது உபயோகப்படுத்தலாம். பெண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து இப்படியே அரைத்துக் கொள்ளவும்.

 இதை குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது  தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தைகளின்  தோல் பளபளப்பாகவும் உடல் நறுமணத்துடனும் பொலிவு பெறும்.

குழந்தைகளுக்கான பிரத்தியேகமான நலங்கு மாவு  வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:.

பயத்தம் பருப்பு  - 1/4 கிலோ
கடலைப் பருப்பு  - 150 கிராம்
ரோஜா இதழ்கள் - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம்
வேட்டி வெரு - 10 கிராம்
ஆவாரம் பூ - 50 கிராம்
பூலான் கிழங்கு - 50 கிராம்
கோரைகிழங்கு - 10 கிராம்
பச்சை அரிசி - 200 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
செம்பருத்தி பூ - 20 கிராம்
ஆரஞ்சு தோல் - 10 கிராம்
வேப்ப இலை - 10 கிராம்


தயாரிக்கும் முறை:

மேலே கூறிய பொருட்களை நன்கு கழுவ வேண்டும். பின்பு அதன் ஈரம் போகும் வரை நன்கு உலர வைக்க வேண்டும். ஈரத்துடன் அரைக்கவே கூடாது. இல்லையெனில் பொடி முழுவதும் வீணாகிவிடும். அல்லது  மேற்கூறிய அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் வைத்து நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். பின்பு அதை எடுத்து சூடு ஆறுமாறு  ஆற வைக்க வேண்டும். பின்பு இங்கு அவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கடையில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம். அரைத்தப் பொடியை காற்று புகாதவாறு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு குளிப்பாட்டும் பொழுது இதை தேய்த்து குளிப்பாட்ட வேண்டும். 

எவ்வாறு உபயோகிப்பது:

முதலில் இந்த பொடி குழந்தையின் தோலுக்கு ஒத்துப் போகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அதற்கு அந்த பொடியை தண்ணீரில் குலைத்து குழந்தையின் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் எடுத்துக்காட்டாக கைகளில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். அன்று நாள் முழுவதும்  குழந்தைக்கு அந்த இடத்தில் எந்தவித எரிச்சலும் வீக்கங்களும் இல்லை எனில் அந்த பொடியை தொடர்ந்து உபயோகிக்கலாம்.

 தினமும் குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது சோப்பிற்கு பதிலாக இந்த குளியல் பொடியை  தண்ணீரில் குழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பில் நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்க வேண்டும்.  குளிப்பாட்டும் பொழுது குழந்தைகளின் கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

 

கவனிக்க வேண்டியவை :

சில குழந்தைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். அல்லது சோப்புகள் உபயோகப்படுத்துவதால் ஒவ்வாமை  மற்றும்  அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் தோளில் தன்மை கேற்ப இந்த குளியல் பொடியை மாற்றியமைத்து உபயோகப்படுத்தலாம். அதாவது சில பொருட்களை சேர்த்து அல்லது சில பொருட்களை நீக்கியோ குழந்தைகளின் தோலின் தன்மை கேற்ப குளியல் பொடி தயார் செய்யலாம். 

ஏன் நலங்கு மாவு பயன்படுத்த வேண்டும்...?

வீட்டில் தயாரிக்கப்படும் நலங்கு மாவு தூய்மையான சுத்தமானது என்பதையும் தாண்டி பல்வேறு வகையான நலன்களை வழங்குகிறது. அவைகள் என்னென்ன என்பதை கீழே பதிவு செய்கிறோம்.

இதில் பெண் குழந்தைகளுக்கு தனியாக அரைக்கப்படும் நலுங்கு மாவில் கஸ்தூரி மஞ்சள் சேர்ப்பதால் 
தேவையில்லாத முடி வளர்ச்சியை தடுத்து நல்ல பளபளப்பான மேனியை கொடுக்கும்.

நலங்கு மாவு குழந்தைகளின் தோலில் உள்ள அழுக்குகளை நீக்கி தோலினை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பளபளப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்.

பொதுவாக மனிதர்களின் தோலில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான  புது செல்கள் உருவாகும். அதே சமயம் லட்சக்கணக்கான செல்கள் இறந்தும் போகும். இறந்த  செல்களை வெளியேற்றுவது மிக முக்கியமான ஒன்றாகும். இல்லை எனில் நமது தோல் கறுத்து விடும். அல்லது  அங்கங்கே கரும்புள்ளிகள் தோன்றலாம். இவை அனைத்தும் இறந்த செல்களினால் உருவாவதே ஆகும். நலங்கு மாவு தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்கள் உருவாக வழி வகுக்கும்.

 வீட்டில் தயார் செய்யும் நலங்கு மாவு குழந்தைகளின் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை வழங்க வல்லது. கடையில் விற்கப்படும் சோப்புகள் மற்றும் ரசாயனம் கலைந்து குளியல் பொருட்கள் குழந்தையின் தோலை சீக்கிரமாக வறட்சி அடைய செய்யும். 

குழந்தைகள் தோல் மிகவும் மென்மையானது. முடிந்த வரை அதை மிக கவனமாக கையாள வேண்டும். நம்மால் ஏற்படும் சிறு கவனக்குறைவு கூட குழந்தைகளின்  தோலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் குளியல் பொருட்கள்,  உடைகள் மற்றும் தட்பவெப்ப நிலை போன்ற காரணங்களால் குழந்தையின் சருமம் அதிக அளவு பாதிப்படைய கூடும்.  பெரும்பாலும் குழந்தைகளின் தோல் பிரச்சனைகளில் தோல் வளர்ச்சி அடைதல் முக்கிய பிரச்சனையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குளியல் பொடி குழந்தைகளுக்கு எந்த வித பக்க விளைவும் ஏற்படாமல் இரசாயன பொருட்களில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. வீட்டிலிருக்கும்  பொருட்கள் கொண்டு இந்த குளியல் பொடி தயாரிக்கப்படுவதால் மிகக் குறைந்த அளவு செலவுதான் ஏற்படும். கடைகளில் விற்கப்படும் சோப்புகள் காட்டிலும் இந்த குளியல் பொடி அரைப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மற்றும் இது ரசாயன பொருட்கள் சேர்க்கப்படாததால்  நல்ல  இயற்கையான நறுமணத்துடன் நீண்ட நாளைக்கு உபயோகப்படுத்தலாம்.

இதைத் தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும்பொழுது குழந்தையின் தோலை கவனித்து வரவும். ஏதேனும் மாறுபாடுகள் அதாவது அரிப்பு, சொறி, வறட்சி மற்றும்  தேமல் என்பவை தென்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.  குழந்தைகளின் சரும பாதுகாப்பு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் தோல் மருத்துவரை அணுகலாம்.

இது போன்ற குழந்தைகளுக்கான டிப்ஸ் தேவைப்பட்டால் எங்கள் பக்கத்தை தொடரவும்.

சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

தாய்ப்பால் சுரக்க அரிசியா....?

பெண்களுக்கான பூங்கார் அரிசி... ஒரு முறை உபயோகித்து பாருங்கள்...

எல்லாமே நவீன மயமாக மாறிவிட்ட நிலையில் நாம் மரபு சார்ந்த சில பொருட்களை இழந்து கொண்டு வருகிறோம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது நமது வேளாண்மை.  முற்காலத்தில் நமது நாட்டில் பயிரிடப்பட்ட பல வகையான அரிசிகளும் பயிர்களும் தற்போது பயிரிடப்படுவதில்லை. எல்லாவற்றையும் மறந்து வெளிநாட்டு உணவு பழக்க வழக்கங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதே இதற்கு காரணம். ஒரு கட்டத்தில் ஏதாவது  ஒரு பிரச்சனையை நமது உடல் சந்திக்கும் போது நாம் நமது மரபு சார்ந்த உணவு பழக்க முறையை யோசிக்க ஆரம்பிக்கிறோம்.  அப்பொழுதுதான் நமது மூதாதையர்கள் விட்டுச் சென்ற உணவுப் பொருள்கள் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
 
அந்த வகையில் மிகச் சிறப்பான ஒரு அரிசியை பற்றி இப்பதிவில் காணப் போகிறோம். அவை  பாவைருக்கான அரிசி எனப்படும் பூங்கார் அரிசி. பெண்களின் நலனில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு வரும் அனைத்து விதமான பிரச்சினைகள், பரம்பரை நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்துக்கும் இது ஒரு நல்ல தீர்வானதாகும். இந்த  அரிசியின் பயன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

 பூங்கார் அரிசி:

முன் காலத்தில் வேளாண்மையில் பலவிதமான அரிசிகளை விவசாயம் செய்து வந்தனர். அதில் நிறைய அரிசி வகைகளை நாம் இழந்துவருகிறோம்.  அப்படி இழந்த அரிசிகளில் முக்கியமான அரிசி பூங்கார் அரிசி.

பூங்கார் அரிசி சிவப்பு நிறத்தில் சாதாரண அரிசி போன்று ஆனால் கொஞ்சம் பருமனாக பெரியதாக காணப்படும்.  இந்த அரிசி எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் பயிறிட முடியும். இது மாப்பிள்ளை சம்பா போன்று இருப்பதால் சிலர் தவறாக இந்த அரிசியை தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு அறுபாதம் கொடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.


இவ்வளவு நன்மைகளா...?


பூங்கர் அரிசியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்,  தயமின்,  சிங்க், தாது சத்துக்கள் என பல வகையான சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. ஆனால் இதில் உள்ள அதிகப்படியான சத்துக்களின் காரணமாக பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை இதை உணவில் சேர்த்து வரும் பொழுது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் சிறந்தது...?

 கர்ப்பிணிப் பெண்கள் இந்த அரிசியை கஞ்சியாக செய்து தினமும் உணவில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு பிரசவத்தை எளிதாக்குகிறது. 

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுப்பதோடு செரிமான உறுப்புகள் நன்கு இயங்கவும் உதவுகிறது. இது எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுப் பொருள் என்பதால் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். இந்த அரிசி பாலிஷ் செய்யப்படாமல் தான் கடைகளில் கிடைக்கிறது. 

பாவையர் அரிசி :

இந்தப்  பூங்கார் அரிசி பெண்களுக்காகவே படைக்கப்பட்ட அரிசி என்று கூறலாம்.  இது கருப்பையில் ஏற்படும் தொந்தரவுகளான கட்டி,  வீக்கம் சினைப்பையில் ஏற்படும் கட்டி, வீக்கம், மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வேறு வித பிரச்சனைகளான உடல் பருமன், ரத்த அழுத்தம், எலும்புகள் தேய்மானம் என அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்கிறது. மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக வலி மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இது உடனடியாக நிவர்த்தி செய்யக் கூடியது.

இந்த அரிசி பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு நல்ல உணவுப் பொருளாகும். அதாவது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த அரிசியில் தீர்வு உண்டு. இது கருப்பை கட்டிகள் மார்பக புற்று நோய், சினைப்பையில் வரும் கட்டிகள், நீர்கட்டிகள்,  வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் ஏற்படும் அலர்ஜி, கருப்பை தொற்று நோய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள், கர்ப்ப காலங்களில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தாய்ப்பால் குறைந்த அளவில் சுரத்தல் என பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும் தீர்வு இந்த அரிசிக்கு உண்டு. என்பதால் இது பெண்களின் அரிசி என்று அனைவராலும் அறியப்படுகிறது.




இது செலியாக் எனப்படும் நோயிலிருந்து குணமடைய உதவுகிறது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது. பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த குறைபாடு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்வரிசியை அவர்கள் தொடர்ந்து உண்டு வரும் பொழுது ரத்த குறைபாடு நோய் சரி செய்யப்படுகிறது.
 கர்ப்ப காலத்தில் பெண்கள் பாதிக்கப்படும் mood swings  எனப்படும் எண்ணங்கள் சமநிலை அற்ற தன்மையில் இருந்து விடுபட இது உதவுகிறது. இந்த அரிசி கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவுவதால் உடல் பரும நோயினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அரிசியை  மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வாறு உண்ணலாம் ...?

பூங்கர் அரிசியை சாதாரண அரிசியை போன்று அனைத்து வழிகளிலும் உபயோகப்படுத்தலாம்.

கஞ்சி 

பூங்கார் அரிசியை நன்கு கழுவிக்கொண்டு ஒன்றில் மூன்று பங்கு தண்ணீரைக் பானையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன்  அதில் கழுவி சுத்தம் செய்த பூங்கார் அரிசியை போட்டு நன்கு குழைய வேக வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்ட கூடாது. ஆரிய உடன் ஊறுகாய் அல்லது ஏதேனும் துவையல் சேர்த்து உண்ணலாம். 

பொங்கல்:

 சாதாரணமாக செய்யும் பொங்கலை போன்று இதிலும் செய்யலாம் அதற்கு பூங்கார் அரிசியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரிசியின் அளவில் பாதியளவு பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருங்காயம் சீரகம் சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு குழைய வந்தவுடன் இறக்கி   விட வேண்டும். பின்பு ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் கடுகு சீரகம் மிளகு கறிவேப்பிலை மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி பொங்கலில் சேர்க்க   வேண்டும். இப்போது சுவையான பூங்கார் பொங்கல் ரெடி. இதனுடன் சட்னி சாம்பார் சேர்த்து உண்ண நன்றாக இருக்கும். 

இட்லி, தோசை மாவு -:

இந்த அரிசியில் இட்லி மாவு தோசை மாவு தயார் செய்து இட்லி தோசையும் செய்யலாம். அதற்கு  மூன்று டம்ளர் பூங்கார் அரிசியையும் ஒரு டம்ளர் பச்சரிசியும் எடுத்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . ஒரு டம்ளர் உளுந்து நான்கு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதையும் நன்கு ஊற வைக்க வேண்டும். இவை இரண்டையும் ஊற வைப்பதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியவுடன் இதை மாவு போல இட்லி பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரத்தில் மாவு நன்கு புளித்து விடும். அதன் பின்பு இட்லியோ தோசையோ சமைத்துக் கொள்ளலாம். 

கூழ்:

 பூங்கர் அரிசியும் கம்பு கேழ்வரகு போன்று கூழ் செய்து சாப்பிடலாம். அதற்கு பூங்கார் அரிசியை  நன்கு கழுவி விட்டு சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதை கூழ்  போல காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பிறகு ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய உடன் அதில் கொஞ்சம் தயிர் சேர்த்து  மூடி வைத்துவிட வேண்டும். காலையில் பூங்கார் அரிசி கூழ் குடிப்பதற்கு  ஏற்றவாறு இருக்கும்.

காலை சிற்றுண்டி:

பூங்கார் அரிசியை மொத்தமாக வாங்கி நன்கு கழுவி காய வைக்க வேண்டும். காய வைத்த பின்னர் கடையில் கொடுத்து அரைத்து வைத்து கொழுக்கட்டை இடியாப்பம் புட்டு போன்ற காலை சிற்றுண்டிகளையும் செய்து கொள்ளலாம்.

ஆக அனைத்து சத்துக்களும் அடங்கிய நம் பாரம்பரிய உணவு பொருட்கள் மிகக் குறைந்த விலையில் நம் கண் முன்னே விளைவிக்க முடிந்தும் அந்நிய உணவுப் பொருட்களை நாம் தேடுவதே பெருகிவரும் நோய்களுக்கு காரணம். நம் மரபு சார்ந்த வேளாண் பொருட்களை மீட்டெடுத்து எதிர்கால  தலைமுறையினருக்கும் அளிப்பதே நமது தலையாயக் கடமை.

இது போன்ற தகவல்கள் அறிய எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்ட் பதிவு செய்யவும்...
Share:

வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.... இதோ கண்காணிக்கும் கேமரா....!

ரேடார் கேமரா எவ்வாறு கண்காணிக்கிறது?

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விதி மீறுதலும் அதிகரிக்க தான் செய்கிறது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க முக்கியமாக நகரங்களில் பல இடங்களில் ரேடார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க, குறிப்பிட்ட வாகனங்களை ஆராய, தவறான வழியில் தவறான முறையில் செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்க ரேடார் கேமரா பயன்படுகிறது. 

அந்த வகையில் சென்னையில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3D ரேடார் கேமரா பொருத்தப்பட்டு வாகனங்களின்  வேகம் கண்காணிக்கப்படுகிறது.  இந்த வகை கேமராக்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வேகங்கள் ஒரே நேரத்தில்  கண்காணிக்கப்படுகிறது. 

ரேடார் கேமராவின் பயன்கள்:

தவறான வழியில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ரேடார் கேமரா உதவுகிறது. இதன் மூலம் போக்குவரத்தை அதிக அளவில் சீர் செய்ய முடியும். மேலும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடித்து அதிகமாக செல்லும்  வாகனங்களுக்கு தடை விதிக்கவும் அபராதம் விதிக்கவும் உதவி செய்கிறது. இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.  இந்த வகை கேமராக்கள் உடனுக்குடன் புகைப்படம் எடுப்பதால் குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்கவும் அது போன்ற வாகனங்களை இயக்குபவர்களை பிடிப்பதற்கும்  உதவுகிறது.

சென்னையில் ரேடார்  கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு:


ரேடார் கேமரா சென்னையில் பொருத்தப்பட்டுள்ள 10 இடங்கள் 

1.அண்ணா சாலை (ஸ்பென்சர் பிளாசா)

2.அண்ணா அறிவாலயம் (Dms)

3.ஆலந்தூர் சந்திப்பு

4.பழைய விமான நிலையம் எதிரில்

5.ECR (ஈஞ்சம்பாக்கம்)

6.அரசு மருத்துவமனை (பாரிஸ் கார்னர்)

7. டெய்லர்ஸ் சாலை (சந்தி)

8. அமைந்தகரை (புல்லா சந்திப்பு)

9.திருமங்கலம் ( எஸ்டேட் ரோடு )

10மதுரவாயல் (ரேஷன் கடை)

வாகனத்தின் வேகம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது

நகரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் மற்றும் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின்  புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படத்தில் வாகனங்களில் எண் உள்ளதால் அது கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டுப்பாட்டு அறையில் வாகனத்தில் எண் மூலம் வாகன உரிமையாளரின் அனைத்து தகவல்களையும் அறிந்து அதன் மூலம் வாகனம் ஓட்டுபவரின் தொலைபேசிக்கு அபராத தொகையுடன் கூடிய இ-சலான் அனுப்பி வைக்கப்படும். ஈ செல்லான் குளம் மொபைல் வழியாகவோ அல்லது நேரிலோ சென்று அபிரகத்தை செலுத்திக் கொள்ளலாம் இந்த வகை கேமராக்கள் பகல் இரவு மழை வெயில் என எந்த பிரச்சினையும் இல்லாமல் இப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும். 

கவனமாக வாகனம் ஓட்டவும் நண்பர்களே ...😰 **
Share:

கர்ப்பிணிப் பெண்களுக்கான அரிசி

அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் மாரடைப்பு உடல் எடை அதிகரித்து நோய்கள் பரவுவதாக ஒரு சிலர் கூறினார்கள். ஆனால் அரிசி சாதம் மட்டும் சாப்பிட்டு அரசியலை சாப்பிட்டு நாம் முன்னோர் மிக வலிமையாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை இப்படி மிக முக்கியமான அரிசிகளை பலவற்றை நாம் இன்று இழந்து நிற்கிறோம் அதில் ஒரு சில அரிசிகள் பலவித நோய்களுக்கு மருந்தாகவும் இருந்திருக்கின்றன அதில் ஒரு முக்கியமான அரிசி பெண்களுக்கான அரிசியாக பார்க்கப்படுகிறது அந்த அரிசியின் பெயர் பூங்கார் அரிசி.

 இந்த பூங்கார் அரிசி பெண்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது 
ஏனெனில் இது பெண்களின் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வதில் முதன்மை பங்கு வகிக்கிறது. 
பெண்களின் உடல் சத்தை அதிகரிப்பதில் இதற்கு அதிக பங்கு உண்டு. முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த அரிசியாக பார்க்கப்படுகிறது.

 6 மாதங்களுக்குப் பின்பு கர்ப்பிணி பெண்கள் இதை தினமும் எடுத்துக் கொள்ளும்போது சுகப்பிரசவம் எளிதாகிறது. 
 இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குவதற்கு உதவுகிறது இதில் உள்ள  துத்தநாகம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி உடல் உபாதைகளை தடுக்கிறது. 

பூங்கார் அரிசி ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
 இதில்  குறைந்த கொழுப்பு அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 காலப்போக்கில் மறந்துவிட்ட   பழந்தமிழர்களின் உணவு முறையை மீண்டும் கடைப்பிடிப்போம். உடலில்  வலு சேர்ப்போம்.
Share:

முன்பதிவில்லாத அந்தியோதயா ட்ரெயின் பற்றி தெரியுமா?

ரயில் பயணத்தை மட்டும் விரும்புவரா நீங்கள்?
 திடீரென்று கிளம்பும் நபரா நீங்கள்?  முன்பதிவு இல்லாத ட்ரெயின் உங்களுக்கு தேவைப்படுகிறதா ? 
 கம்மி விலையில்  ட்ரெயினில் முன்பதிவின்றி செல்ல வேண்டுமா?  படியுங்கள் இது உங்களுக்கான பதிவு....

பொதுவாகவே நம்மில் அனைவருக்கும் பயணம் செய்தல் என்பது பிடித்தமான ஒன்று. பயணங்கள் பிடிக்காதவர்கள் வெகு சிலரே..  அந்த சிலருக்கும் எதாவது  கட்டாய பயணத்தின் போது  விரும்பி செல்வது ரயில் வண்டிகளில் மட்டுமே... ஏனெனில் பயணக் களைப்பின்றி உரிய நேரத்தில் அதே சமயம் குறைந்த விலையில் அதிக பாதுகாப்புடன் பயணிக்க ஒரே வழி ரயில் மட்டுமே...

ஆனால் இந்த ரயில் பயணத்தில்  மிகப்பெரிய குறைபாடு ஒன்று உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள் அல்லது பயண திட்டமிடல் இல்லாதவர்கள் திடீரென்று ரயிலில்  பயணம் செய்ய இயலாது.. அவ்வாறு செய்தாலுமே பொது இருக்கையில் மட்டுமே இடம் கிடைக்குமே தவிர நமக்கு உரிய தனி இடம் கிடைக்க இயலாது... பொது இருக்கையில் பயணம் செய்வது அனைவருக்கும் சாத்தியமல்ல. பெண்கள், குழந்தைகள் மற்றும்  முதியவர்களுக்கு பொது இருக்கையில் இருக்கை கிடைக்கவில்லை எனில் பயணம் செய்வது மிகவும் சிரமமாகிவிடும். எனவே தான் இந்திய ரயில்வே துறை அனைத்து வர்க்கத்தினரும் மற்றும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய நேற்பவர்களுக்கும் அந்தியோதயா எனப்படும்  முழுவதும் முன்பதிவு இல்லாத  வண்டி ஒன்றை 2017ல் அறிமுகப்படுத்தி உள்ளது.

 அந்தியோதயா என்பதற்கு ஏழைகளுக்காக என்பது பொருள். அந்தியோதயா என்பது ஏழைகளுக்கான ரயில் வண்டி எனப் பொருள்படும். இந்த பொருளுக்கு ஏற்ப ஏழை மக்கள் அனைவருக்கும் உகந்ததாக இருப்பது இந்த ட்ரெயின். இதுவும் மற்ற ட்ரெயின்களை போல அனைத்து வசதிகளும் உள்ளதாகவே உள்ளது. அதாவது மின்சார பொருட்கள் உபயோகப்படுத்துவதற்கான சார்ஜர், டாய்லெட், குப்பைத்தொட்டி மற்றும் தாங்கிகள் போன்று பல வசதிகள் உள்ளன.

சதாப்தி   மற்றும்  ராஜ்தானி போன்ற வண்டிகளில் இருப்பது போன்று உணவு மற்றும்  குழிரூட்டப்பட்ட இருக்கைகள் என வசதிகள் அந்தியோதயா ட்ரெயின்களில் இல்லை. ஆனாலும் இரண்டாம் தர வசதியுடைய இருக்கை அமர்வுகள் உள்ளன. மேலும் சுத்தமான தண்ணீர் இந்திய ரயில்வே துறை வழங்குகிறது. இந்த ட்ரெயினில் பயணிப்பவர்களுக்கு தனியாக உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்படாது. ஏனெனில் இது முழுவதுமாக பட்ஜெட் அதாவது குறைந்த விலையில் பயணத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். எனவே இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நலம். ஆனால் தண்ணீர் தனியாக பொட்டிகளில் அடைக்கப்பட்டு கொடுக்கப்படாது. அதற்கு பதிலாக அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே பயணத்தின் பொழுது தண்ணீரும் உணவுப் பொருட்களும் நம்முடைய எடுத்துச் செல்வது சிறந்தது. அதுவும் தண்ணீர் நமது பயணத்தில் மிகவும் அவசியம். எனவே தனிப்பட்ட முறையில் தண்ணீர் எடுத்துச் செல்வது சிறந்தது.

மேலும் இந்த வகை ட்ரைனில் படுக்கைக்கு தேவையான தலையணை மற்றும் படுக்கை பொருட்களும் வழங்கப்பட இயலாது.
 ஏனெனில் இது ஸ்லீப்பர் கோச் போன்று வடிவமைக்கப்பட்டது அல்ல. இது முழுவதும் பகலில் பயணம் செய்வது போன்று அதாவது இருக்கை அமர்வு கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இது மிகவும் குறைந்த பயண கட்டணம் உடைய வண்டி ஆகும். பொதுவாக  முன்பதிவு இல்லாத கட்டணத் தொகை மற்ற டிரெயின்களுக்கு எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ அந்தத் தொகை மட்டுமே இந்த ட்ரெயினில் வசூலிக்கப்படுகிறது.  இதைத் தவிர அதிகபட்சமாக எந்த கட்டணமும் இல்லை. அதனால் தான் இது ஏழைகளுக்கான வண்டி என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. இது முழுவதுமாக அனைத்து வர்க்கத்தினரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் வடிவமைக்கப்பட்டது.

முதல் அந்தியோதயா விரைவு வண்டி எர்ணாகுளம்  சந்திப்பில் இருந்து அவுரா சந்திப்பு வரை 2017 துவங்கி வைக்கப்பட்டது. அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு இதை தொடங்கி வைத்தார்.
தற்போது 15 வண்டிகளுக்கு மேலான அந்தியோதயா ட்ரெயின் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.




16191 -  தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதயா ட்ரெயின்.

தினமும் இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை வழியாக 12 இடை நிறுத்தங்களுடன் நாகர்கோவிலுக்கு சராசரியாக நண்பகல் ஒரு மணிக்கு செல்கிறது. இது தினசரி வண்டியாகும். சிறிது காலம் மாற்றங்கள் இருந்தாலும் தினசரி இந்த வண்டி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்கிறது. இது 2018ல் முதல் முறையாக இயக்கப்பட்டது.

முன்னதாக இந்த வண்டி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட்டது. பின்பு வேண்டுகோளுக்கு இணங்க நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு தற்சமயம் இயக்கப்பட்டு வருகிறது

இடைநிறுத்தங்கள் :

செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி,  வள்ளியூர்,  நாகர்கோவில்.

இந்த ட்ரைனில் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள 16 இரண்டாம் வகுப்பு இருக்கை அமர்வுகளும் மற்றும் இரண்டு பெட்டி பொது இருக்கை பெட்டிகளும்  ஆக மொத்தம் 18 பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகள்.


இது மேற்கூறியவாறு மொத்தம் 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.

16192 -   நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா ட்ரெயின்

மாலை 3.50க்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த வண்டி 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று  காலை 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இடைநிறுத்தங்கள்:

நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி,கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரி புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்.

3.50க்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த வண்டி 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று இருந்து காலை 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த வண்டி விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வதால் முக்கியமான இடை நிறுத்தங்களில் நின்று செல்கிறது. எனவே பெரும்பாலான தென் மாவட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நாட்களில் அந்தியோதயா ட்ரைன் புறப்படும் நேரம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். எனவே பயணம் செய்ய நினைப்பவர்கள் இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகி அதன்மூலம் நேரத்தை அறிந்து கொண்டு பயணம் செய்வது சிறந்தது.

அதிக பணம் செலவழிக்க முடியாதவர்கள் திட்டமிடல் இல்லாமல் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதுபோன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

கருவில் இருப்பது ஆணா...? பெண்ணா...? என்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்..

கர்ப்பம் அடைதல் என்பது பொதுவாக பெண்களின் வாழ்வில் ஒரு அழகிய விழா போன்றது. தாய்மை அடைதல் என்பது பெண்களுக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம். கர்ப்பிணி பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய விரும்புகின்றனர். 

கர்ப்பிணிப் பெண் மட்டுமல்லாமல் அவளைச் சார்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் இதை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கிறது. ஆனால் இந்திய சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் ஸ்கேன் எடுக்கப்படும் பொழுது குழந்தையின் பாலினம் சொல்லப்படுவதில்லை. கொடுக்கப்படும் டாக்குமெண்டிலும் எந்த பதிவும் பாலினத்தை பற்றி பதிவு  செய்யப்பட்டு இருக்காது. இந்திய அரசு கருவதை தடுப்புச் சட்டம் விதிப்பதற்கு முன்பு ஸ்கேன் ரிப்போர்ட்டில் பாலினம் தனியாக சொல்லப்பட்டு இருக்கும்.

 XX  மற்றும்  XY  என பதிவிடப்படும். அதை வைத்து XX என்றால் பெண் குழந்தை எனவும்  XY என்றால் ஆண் குழந்தை எனவும் அறிந்து கொள்வர். ஆனால் பாலினத்தை அறிந்து கொள்ளும் சட்டம் வந்த பின்னர் அது ஸ்கேனில் பதிவிடப்படுவதில்லை. பொதுவாக அனாட்டமி ஸ்கேன் என்று அழைக்கப்படும் ஸ்கேன் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மூன்றாவது மாதம் அல்லது 12 வாரங்களுக்கு பின்பு எடுக்கப்படும். இந்த ஸ்கேனில் குழந்தையின் பாலினம் நன்றாக தெரிய வரும்.  தற்போதைய காலங்களில் 10 வாரங்களுக்கு தாண்டிய உடனே  பாலினத்தை கணிக்கும் முறை வந்துள்ளது. என்னதான் தொழில் நுட்பம் வந்து இருந்தாலும் நமது தடைச் சட்டம் பாலினத்தை அறிந்து கொள்வதற்கு ஒரு விழுக்காடு  கூட இடம் தருவதில்லை. ஆனாலும் அனைவரின் விருப்பம் முன்னரே கருவின் பாலினத்தை தெரிந்து கொள்வது.  கருவில் இருக்கும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.

  ஆனாலும் சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ள நம் முயல கூடாது. 

அதே சமயம் பழங்காலத்தில் இருந்து நமது பெரியவர்கள்  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்பே அறிந்து கொள்வதற்கு சில அறிகுறிகளை கூறியுள்ளனர். அது எல்லோருக்கும் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு நடப்பதை கணித்துதான் நமது முன்னோர்கள்  கூறி இருக்கிறார்கள். 

அதில் சில முக்கியமான விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கிறோம்.

பெண் குழந்தைக்கான அறிகுறிகள்

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் எந்தவித சோர்வும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால் அதாவது கர்ப்பத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால் அந்த பெண்ணின் கருவில் இருப்பது பெண் குழந்தை. 

கொஞ்சம் குமட்டல் வாந்தி கொஞ்சம் சோர்வு அதாவது தாங்கிக் கொள்ளக்கூடிய அளவு இருந்தாலும் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 
முதல் 8 மாதமும் எந்த அறிகுறியும் இல்லாமல் 
ஒன்பதாவது மாதத்தில் இருந்து மட்டும்  வாந்தி இருந்தால் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

முடி கொட்டுவது வயிற்றின் வடிவம் அளவு இதையெல்லாம் வைத்து  கணிக்கப்படுவது பொதுவாக சரியான பலன் தராது. ஆனாலும் அதை வைத்து சிலர் சில அறிகுறிகளை கூறியுள்ளனர். அதையும் இங்கு பதிவு செய்கிறோம்.

 கர்ப்பிணி பெண்ணின் வயிறானது வட்ட வடிவமாக மேல் நோக்கி இருந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

 அதே போல் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் நடுவே தொப்புள் வழியே ஒரு கோடு செல்லும். அந்த கோடு வளைவுடன் இருந்தால்  அது பெண் குழந்தைக்கான அறிகுறி. பணத்தை போல் அந்த கோடு நீண்டு செல்லாமல் பாதியிலேயே நின்றிருந்தாலும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

முடி கொட்டாமல் இயல்பாகவோ அல்லது முடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் அதுவும் பெண் சிசுவை தாங்கி இருப்பதற்கான அறிகுறி. 

கர்ப்பிணிப் பெண் உட்கார்ந்து எழும் பொழுது தனது இடது கையை அதிகமாக உபயோகித்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

 கர்ப்பிணிப் பெண்ணின் வலது மார்பகம் சிறியதாகவும் இடது மார்பகம் பெரியதாகவும் காணப்பட்டால் அது ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி.

 கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இடது பக்கம் அசைவுகள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி. ஏனெனில் பெண் குழந்தை இடது பக்கம் உருவாவதாக ஒரு நம்பிக்கை நம்மிடையே உண்டு.

கருவுற்றிருக்கும் பெண்ணின் சிறுநீர் எவ்வித மாற்றமும் இல்லாமல் அல்லது மஞ்சளாக இல்லாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறி. 

கர்ப்பிணிப் பெண்ணின் கணவனின் உடல் எடை அதிகரிக்கிறது என்றால் அவர்கள் வீட்டில் பெண் குழந்தை வரப்போகிறது என்று அர்த்தம் பெண்.

கர்ப்பிணி பெண்  இனிப்பு வகைகளை அதிகமாகவும் காரம் சார்ந்த உணவுகளை தவிர்த்து வந்தால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அந்தப் பெண் அதிகமாக தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுபவராகவும் அடிக்கடி பசி  எடுத்து சாப்பிடுவராகவும் தூங்கிக் கொண்டேயும் இருப்பார்கள்.

 கருவுற்றிருக்கும் பெண்ணின் கருவில் பெண் குழந்தை இருந்தால்  அந்தக் குடும்பத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

ஆண் குழந்தைக்கான அறிகுறிகள்

எப்பொழுதும் சோர்வாக இருப்பது அதுவும் காலை நேரத்தில் அதிக சோர்வு ஆண் குழந்தைக்கான அறிகுறி. 

தொடர்ந்து வாந்தி குமட்டல், தலை சுற்று, உணவில் நாட்டமின்மை, எடை இழப்பு, மயக்கம் பார்ப்பதற்கு முகம் வெளுத்து வாய் கோணலாக அதாவது அழகின்றி காணப்படுவது, எப்பொழுதும் சோகமான முகம் தெளிவற்று  இருப்பது இவை அனைத்தும் ஆண் குழந்தைக்கான அறிகுறி.

ஆண் குழந்தை சுமக்கும் பெண்ணிற்கு எப்பொழுதும் மூட் ஸ்விங்ஸ் எனப்படும்  மனம் சமநிலை இல்லாத தன்மை அதிகமாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கூர்மையானதாகவோ நீண்டிருந்தாலோ  இடுப்பு பக்கத்தில் வயிறு இல்லாமல் முழுவதும் கீழ் நோக்கி இறங்கி இருந்தால் அது ஆண் சிசுவை கொண்டு இருப்பதற்கான அறிகுறி.

ஆண் குழந்தையை சுமத்தர்கள் பெரும்பாலும் இனிப்பை உண்ண மாட்டார்கள் காரம் உப்புச் சார்ந்த உணவு வகைகளை அதிகமாக உண்டு

அதனால் இவர்கள் எப்பொழுதும் அதீத கோபம், அழுகை, எரிச்சல் மற்றும் தனித்திருப்பது போன்ற காரணங்களை கொண்டு இருப்பர். 

கருவுற்றிருக்கும் பெண் உட்கார்ந்து எழும் பொழுது வலது கையை அதிகமாக உபயோகித்தால் அது ஆண் குழந்தைக்கான அறிகுறி.

 கருவுற்றிருக்கும் பெண்ணின் வயிற்றில் அசைவுகள் வலது பக்கம் அதிகமாக இருந்தால் அதுவும் ஆண் பிள்ளைக்கான அறிகுறிகள்.

 கருவுற்றுக்கும் பெண்ணின் வலது மார்பகம் தடித்து இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால் அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறி..

கருவுற்றுக்கும் பெண்ணின் முடியானது வறட்சியுடனும் அதிகமாக கொட்டுதலோ இருந்தால் அது ஆண் சிசுக்கான அறிகுறி...

 வெளிர்மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிப்பது, உணவின் மீது வெறுப்பு ஏற்படுவது, அதிக கோபம் போன்றவை ஆண் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள். 

 மேலே கூறிய அறிகுறிகள் அனைத்தும் ஆராய்ச்சி முடிவில் கணிக்கப்பட்டது அல்ல... இது ஒரு உத்தேசமாக கணிக்கப்பட்டது தான். இதில் வரும் அனைத்து அறிகுறிகளும் எல்லா கர்ப்பிணிகளுக்கும் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாறாக இதில் அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் குழந்தை பெற்றவர்களும் ஏராளம்.


 இப்பொழுது  குழந்தை பெற்றுக் கொள்வது முழுவதும் மருத்துவ மையமாகிவிட்டது. அந்த காலத்தில் 10 குழந்தைகளை பெற்றாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பார்கள. ஆனால் இன்று ஒரு குழந்தைக்கு ஏங்கும் பெண்களே ஏராளம். வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகி விட்டாலும் நிறைய பிரச்சனைகளுடன்  பெண்கள் கஷ்டப்படும் நேரத்தில் எந்த குழந்தையாக இருந்தாலும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வது சிறந்தது.

இது போன்ற மென்மேலும் தகவல்களைப் பெற எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.