நட்ஸ் ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்...?

நட்ஸ் எனப்படும் உலர்  கொட்டைகளில்   அதிகமான இரும்பு, புரதம், கால்சியம் மற்றும் அனைத்து வகையான தனிம  சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. பலர் இந்த கொட்டைகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து உடல் எடை கூடுகிறது என்று நினைக்கின்றனர். உண்மையில்  நட்ஸ் அனைத்திலும் நல்ல வகை கொழுப்புகளே உள்ளன. இதை சரிவிகிதமாக எடுக்கப்படும் பொழுது உடல் எடை கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இந்த உலர் பழ கொட்டைகளில் காணப்படும் கொழுப்பு வகை நல்ல கொழுப்பு அமிலங்களே. இதை உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் கடல் உணவு பொருட்கள் மட்டுமே அதிகமாக இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உலர் பழ கொட்டைகளில் மட்டுமே அதிகமாக நிறைந்துள்ளன. எனவே அசைவம் விரும்பாத சைவப் பிரியர்களுக்கு இந்த உலர் பழ கொட்டைகளே சத்துக்களின் மூலாதாரம்..

நட்ஸ் அல்லது உலர் பல கொட்டைகள் பின்வருமாறு:

முந்திரி
பாதாம் 
பிஸ்தா 
உலர் திராட்சை பழம் 
பேரிச்சை 
பெக்கன்ஸ் 
மக்கடமியா நட்ஸ் 
பிரேசில் நட்ஸ் 
நிலக்கடலை

 இன்னும் பலவகையான உலர் பல கொட்டைகள் எல்லோராலும் விரும்பி உண்ண படுகின்றன. மேற்குறிப்பிட்ட நட்ஸ் வகைகள் அனைத்தும் இந்தியாவில் பரவலாக விரும்பி விண்ணப்படும் கொட்டைகள். அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, நிலக்கடலை, மற்றும் உலர் திராட்சை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பாதாம் கொட்டைகளை உண்டு வரும்போது எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்கள் உள்ளன. அதாவது எல்லா காலத்திலும் எல்லோராலும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் இந்த உலர் பழ கொட்டைகளும் ஒன்று. அவ்வாறு உண்பதற்கு ஏற்றவாறும் எளிய முறையில் உண்ணும் மற்றும் எளிய வகையில் கிடைக்குமாறும் இது இருப்பதால் இதை உணவில் சேர்த்துக் கொள்வது எளிதாகிறது. 


ட்ரை  ஃப்ரூட்ஸ் அல்லது உலர் கொட்டைகள் எனப்படும் இவைகளை அதிகளவாக உட்கொள்ளப்படும் பொழுது அல்லது குழந்தைகள் பெரியவர்கள் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது செரிமான உறுப்புகள் பிரச்சினைக்குள்ளாகின்றன.


 இதனால் அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு மற்றும் மலச்சிக்கல் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுபோல இவைகளை தினமும் அல்லது அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சிலருக்கு உடல்  எடையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.  

 அதிக பலன் அளிக்கக்கூடிய இந்த கொட்டைகளை அதன் பலனை மட்டும் உடலில் சேர்த்திட ஒரு எளிய வழி உண்டு. இந்த கொட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து உண்பதன் மூலம் பைட்டிக் அமிலம் என்பது தண்ணீரால் கிரகிக்கப்படுகிறது. இந்த அமிலமே செரிமான பிரச்சினையை உண்டாகும். இது தண்ணீரில் கிரகிக்கப்படும் பொழுது கொட்டைகளை மட்டும் நம் உண்பதால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுதாக கிடைக்கிறது. பொதுவாகவே கொட்டைகளையும் பருப்புகளையும் ஊற வைத்து உண்ணப்படும் பொழுது அது தனது நிலையில் இருந்து மற்றொரு எளிதான நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறது. அதுவும் நீரில் ஊற வைக்கப்படும் பொழுது அதில் உள்ள கடின கொழுப்புகள் மற்றும் சில பொருள்கள் எளிய நிலையை அடைவதால்  
உடனடியான ஆற்றலை அளிக்கிறது.


உடல் எடை அதிகரிப்பு பயம் உள்ளவர்கள் இந்த கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் டிரை ஃப்ரூட்ஸில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் நல்ல வகை கொழுப்புகள். இந்த நல்ல வகை கொழுப்புகள் உடலுக்குத் தேவை இல்லாத உடல் எடையை அதிகரிக்க கூடிய கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பெரும் பங்கு வகிக்கிறது. தினமும் இந்த கொட்டைகளை ஊற வைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதில் பாதாம் கொட்டைகளை முழுவதுமாக 6 மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். அவ்வாறு ஊற வைத்த கொட்டைகளை காலையில் அதன் தோலை உரித்து விட்டு உண்ணும் பொழுது அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் அது அளிக்கிறது.

 பெக்கென்ஸ் மற்றும் வால்நட்ஸ் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கும் போது அதில் உள்ள எண்ணெய் பொருள்கள் வெளியேறும். எனவே அதிகப்படியான எண்ணெய் அதாவது கொழுப்பு வெளியேறும் பொழுது அது முழுவதும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள பொருளாக மாறி விடுவதால் உடல் எடை மற்றும் அதிகப்படியான கொழுப்பை பற்றிய கவலை இருக்காது.


 
முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் போதும் அதில் உள்ள தேவையற்ற பொருட்கள் நீங்கிவிடும். முந்திரி பிஸ்தா மிக மிருதுவான கொட்டைகள் என்பதால் இது சிறிது நேரத்திலேயே நன்கு ஊறி விடும். இதை அதிக நேரம் ஊற வைத்தாலும் இதில் உள்ள சத்துக்கள் நீங்கிவிடும் எனவே குறிப்பிட்ட நேரம்  மட்டுமே ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைத்து உண்ணும் போது தேவையற்ற பொருட்கள் நீங்கியும் அதிகமான சத்துக்கள் உடலில் எளிதாகவும் சேர்ந்து விடும்.

 இதுபோல கொட்டைகளை நீரில் ஊறவைத்து  சாப்பிடும் பொழுது சத்துக்கள் எளிய வடிவில் உடலினை அடைகின்றன. எனவே கடின வேலைகளை செய்யாமல் செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. பொதுவாகவே செரிமான பிரச்சினை உடையவர்கள் அல்லது முதியோர்கள் அல்லது குழந்தைகளுக்கு இந்த வகை நட்ஸ் பொருட்களை கொடுக்கும் பொழுது அதை ஊற வைத்து கொடுத்தால் எந்தவித செரிமான பிரச்சனையும் அவர்களுக்கு வராது.

 இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.
Share:

1 comment:

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.